செவ்வாய், 8 ஜனவரி, 2013


முத்தரைய வம்சம் பெரியண்ணன் பட்டக்கார குடும்பத்து வாரிசான திரு ,அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஸ்ரீரங்கத்தில் எட்டாம் நாள் வேடுப்பறி திரு விழா !நமது இனத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் 
 கொங்கு வெள்ளாளர் பேரவை சார்பில் பெரும்பான்மை சமூகத்தினர் என மற்ற இனத்தை குறிப்பிட்டுவிட்டு நம் இனத்தை விட்டுவிட்டார் என நண்பர் கவி அவர்கள் வருத்தப்பட்டதை தெரிவித்திருந்தேன் நேற்று இரவு அவரின் தொலைபேசி என் கிடைத்தது அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் அரசின் 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நமது மக்கள் தொகை எவ்வளவு இன்றைய தேதிக்கு எவ்வள்ளவு இருக்கும் என்றும் நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்று உடனே இன்று அதிகாலையில் அவரிடமிருந்து தொலை பேசி அழைப்பு தவறாக நினைத்து கொள்ளாதீர்கள் எனக்கு முழு விவரம் கிடைக்காததால் தான் என்றும் மற்ற தலைவர்கள் தொடர்பு இல்லாததால் தான் குறிப்பிடவில்லை என்றும் வருத்தப்பட்டார் ,இன்று சன் தொலைக்காட்சியிலிருந்து பேட்டி எடுக்க வருவதாகவும் அப்போது தவறாமல் முத்தரையர் இனத்தை குறிப்பிடுவதாகவும் கூறினார் ,அதேப்போல் மீண்டு பகல் ஒரு மணி அளவில் தொலை பேசியில் அழைத்து பேட்டி முடிந்து விட்டது முத்தரையர் இனத்தையும் மறக்காமல் கூறியிருக்கிறேன் என்று கூறினார் .
நிற்க அவர்கள் தலித் அல்லாத பெரும் பான்மை சமுதாயத்தினரை ஒன்று திரட்டுவதாகவும் முக்கியமாக தலித்கள் மற்ற இனத்து பெண்களை வஞ்சிக்கிறார்கள் என்றும் அதை தடுத்து நிறுத்த வேண்டி ஒரு இயக்கம் ஆரம்பிக்க போவதாகவும் அது குறித்து போடும் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார் .ஆனால் இதில் கலந்து கொள்ளுவது என்பது நமது இனத்தின் மூத்த தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ,நாமும் நத்தம் மற்றும் மங்களம் போன்ற இடங்களில் அவர்களுடன் பிரச்சினை இருப்பது தெரிந்ததே ,என்றாலும் இது போன்ற விசயங்களுக்கு நம் சமுதாய தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும் .மற்ற இனத்தவர்களை முத்தரையர் என்று சொல்ல வைக்க முடிகிறது ஆனால் நாம் உட்பிரிவு சொல்லி கொண்டிருக்கிறோமே அதுதான் வருத்தமாக இருக்கிறது .
தமிழ் நாடு முத்தரையர் சங்க செயற் குழுவில் சென்னை சிந்ததிரி பேட்டை கட்டிட வேலைகளை விரைவில் முடிக்கவேண்டும் ,அதற்க்குண்டான நிதி பற்றாகுறை போக்க அனைத்து மாவட்டங்களிலும் நிதி திரட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .இந்த கூட்டம் நேற்று சிவகங்கை மாவட்டம் மதகு பட்டி முத்தரையர் ITI வளாகத்தில் நடை பெற்றது .

கள்ளர் வகுப்பு மாணவிகளுக்கு புதிய பள்ளி: ஜெ., உத்தரவு


கள்ளர் வகுப்பு மாணவிகளுக்கு புதிய பள்ளி: ஜெ., உத்தரவு 
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  ‘’பிரமலை கள்ளர் வகுப்பை சார்ந்த மாணவ- மாணவியர்கள் அதிக அளவில் கல்வி பயிலுவதை ஊக்கு விக்கும் பொருட்டு, மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி, தேனி மாவட்டம் கருவேல் நாயக்கன்பட்டி மற்றும் பொ.மீனாட்சிபுரம் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும்,


மதுரை மாவட்டம் கரடிக்கல் மற்றும் முத்துப்பட்டி, 
திண்டுக்கல் மாவட்டம் சித்தர்கள் நத்தம் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும்,  தேனி மாவட்டம் மார்க் கையன் கோட்டை மற்றும் முத்தணம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் சென்னம நாயக்கன்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் ஆணையிட்டார். 
மதுரை மாவட்டத்தில் உள்ள செக்கானூரணியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுமியருக்கு என தனியே செக்கானூரணியில் அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
இப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்காக 2.02 கோடி ரூபாயும், ஆய்வக மற்றும் விளையாட்டு உபகரணங்கள், மேசை, நாற்காலி மற்றும் பீரோ போன்ற தளவாட சாமான்கள் வாங்குவதற்காக 20 லட்சம் ரூபாயும்,  ஆக மொத்தம் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

        இந்த முதல்வரின்  உத்தரவு வரவேற்க படவேண்டியது தான் ,கல்விக்கு ஈடு இணை ஏதுமில்லை கல்விக்கு உதவிட்டவர்கள் போற்றப்படவேண்டியவர்கள் , அதே சமயம் இன்றைக்கு தமிழகத்தில் இரண்டரைக்கோடி மக்களை கொண்ட சமுதயாமும் காலம் காலமாக அதிமுக என்னும் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இரட்டை இலைக்கு வாக்கு வங்கியான முத்தரையர் சமுதாய பள்ளிகள் பல கேட்ப்பாரற்று பாழ்பட்டும் ,பராமரிக்க முடியாமலும் கிடக்கின்றன போதிய நிதி ஆதாரங்கள் இல்லமால் முத்தரையர் இன மாணவர்கள் நல்லதொரு சூழுநிலையில் கல்வி பயல முடியாமல்  லட்ச்ச கணக்கான மாணவர்கள் தவிக்கின்றனர்  அவர்கலுக்கெல்லாம் விடிவு பிறப்பது ,இந்த ஆட்சியாளர்கள் கவனம் திரும்புவது எப்போது ? எங்கே திரும்ப போகிறது ,மற்ற சமுதாயத்தினர்கள் அங்கே கோலோச்சி கொண்டிருக்கும் போது அவர்களின் சமுதாயத்திருக்கு தேவையானவைகளை பெற்று கொடுக்கிறார்கள் ,ஆனால் இந்த முத்தரையர்  பெரும்பான்மை  சமுதாயத்திருக்கு  அதுப்போல் செயலப்பட  யாரும் இல்லையா ? ஏன் இல்லை இருக்கிறார்கள் ,ஆனால் அவர்களை செயல் பட விட்டால்தானே ? அவர்கள் மீதுதான் வழக்குகள் ,வன்முறைகள் ஏவப்படுகின்றன .அப்படி கொல்லப்பட்ட தலைவரின் வழக்கு என்ன ஆயற்று  என்று கூட தெரிய வில்லை அதை பற்றி கேட்பதற்கும் ஆள் இல்லை ,இருப்பவர்கள் சொன்னாலும் கேட்பதில்லை ,  அண்ணன் எப்போ ஒழிவான் திண்ணை எப்போ காலியாகும் என்று நினைத்து பணியாற்றும் நினைப்பில் இருந்தால் என்ன செய முடியும் ,

       இந்த பதிவிருக்கும் பதில் வரும் நீ திமுக காரன் கலைஞர் என்ன  செய்தார் என்று ,இதே கலைஞர் ஆட்சி காலத்தில் தலாரி வேலைக்கு இனிமேல் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்கள்  நியமிக்கப்படுவார்கள் என்று அரசாணை  வந்தப்போது செய்தி வந்த செய்தி தாளோடு அப்போது எங்கள் பகுதியில் நடந்த  முத்தரைய சமுதாய கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டத்தின் கவனத்திருக்கு கொண்டு சென்றேன் என்ன மாதிரி போராட்டங்கள் நடத்தலாம் என்றும்  கூட என் கருத்துக்களை முன் வைத்தேன்  ,ஆனால் தலைவர்கள் அமைச்சர்களை சந்தித்து பேசி முடிக்கிறோம் என்று கூறினார்கள் ,அக்கூட்டத்தில் நான் கூறியது போல  அப்போதைய  முதல்வருக்கு முத்தரையர் இனத்தினர் அனா பைசா ஊதிய காலத்தில் இருந்து இந்த வேலையை செய்துகொண்டு வருகிறார்கள் இப்போது ஒரு கணிசமான ஊதியம் கிடைக்கும் காலத்தில்  வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை நியமிக்க கூடாது ,இப்போது உள்ள நிலையே தொடர வேண்டும் கோரி தந்தி அனுப்பினேன் அதுப்போல் வேறு யாரும் அனுப்பினார்கள  என்று தெரியாது இதை முன்பு குழுமத்தில் பதிவிட நினைத்த போது  ஒரு நல்லவர்   வேண்டாம் என்று தடுத்துவிட்டார் அவரே என்னை திமுக காரன் என்றும் பிரசாரம் செய்கிறார் அவர் இப்போது குழுமத்தில் இல்லை ,அது வேறு விஷயம் அவர்கள் வண்டி ஓட்ட வேண்டும் அதருக்கு நான் தேவைப்படுகிறேன் எழுதிவிட்டு போகட்டம் கவலை இல்லை , விஷயம் அதுவில்லை  அரசு நம் சமுதாயத்திருக்கு செய்ய வேண்டியவைகளை  பெருவதருக்கு   யாரும் பெரிதாக ஏன் குரல் கொடுக்க மாட்டேன்கிறார்கள் என்பதுதான் கேள்வி ,அதே சமயம் துதி பாடுவதில் மிகுந்த அக்கறை மட்டும் காட்டுவதேன் ? " யோகியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை ", என்பதுப்போல திருடன் ,திருடன் என்று கத்திக்கொண்டே கூட்டத்தில் நல்லவன் போல் ஓடி தப்பித்து கொள்வது போல ,அரசை துதிப்பாடினால் , வேண்டப்பட்டவர்களுக்கு தேர்தலில் சீட்டோ ,வாரியமோ ,இன்னம் பிற வற்றை பெறலாமா என்று கணக்குபோட்டு செயல் பட்டு கொண்டிருகிறார்கள் அதை திட்டமிட்டு செய்கிறார்கள் , இன்னும் சிலரே எங்களுக்கு இதை செய்து தாருங்கள் உங்களக்கு வேலை வாங்கி தருகிறோம் என்று கூறி நண்பர்களின் ஏழ்மையை பயன்படுத்தி கொள்கிறார்கள் இது போன்றவர்களை இனம் கண்டு ஒதுக்கும் படும் வரை முத்தரையர் இனத்திருக்கு விடிவு பிறக்காது ,முத்தரையர் இன இளைஞர்கள்  ஒன்று பட்டு  பட்டு கட்சி மறந்து இனம் என்ற ஒரு குடைக்குள்  செயல் படுவது மட்டுமே நன்மை பயக்கும் .