புதன், 9 செப்டம்பர், 2015

we are pleased to announce that MUTHAMIZHAR RESEARCH CENTRE ,TRUST has been established to bring out historical truth of MUTHARAIYAR KINGDOM which has been  hidden so far ,therefore muthamizhar research trust going to engage scholars to register our kings emphatic win in the battle ground and other cultural sculpture ,tanks ,temples and other monuments , i am sure which is amazing history never aware by people of the world.so ,in this assignment  people can take part and contribute their possible way .welcome all 

முத்தமிழர் கலைபண்பாட்டு மையம் ஆராயிச்சி மையம் &அறக்கட்டளை ,பதிவு செய்யப்பட்டுள்ளது முத்தமிழர் ஆராய்ச்சி அறகட்டளை முழுக்க முழுக்க முத்தரையர் சரித்திரம் மற்றும் கலை மற்றும் பண்பாடு வெற்றி என்று அனைத்தையும் கை தேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூலம் ஆராய்ந்து வெளி கொணர்ந்து இவுலகிருக்கு நம் பெருமைகளை பறைசாற்ற வேண்டும் என்பதேயாகும் இதற்கான அனைத்து முயற்ச்சிகளும் மேற்கொள்வதே முத்தமிழர் அறக்கட்டளையின் நோக்கமாகும் ,இதில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்களால் இயன்ற வகையில் பங்களிப்பு செய்யலாம் .
வேலூர் மாநகர் சத்துவாச்சாரி இளம் சிங்கம் சதீஷ் சிவலிங்கம் அவர்களுக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தமைக்கு விளையாட்டு தேசிய விருதான அர்ஜுனா விருது  அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை பதிவதில் மட்டற்ற மகிழ்ச்சி இதே போல் மேலும் பல சாதனைகளும் விருதுகளும் பெற வாழ்த்துவோம் .

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அதிமுக திருச்சி மாவட்டம் பொறுப்பில் முத்தரையர்கள் செல்வாக்காக இருந்த காலம் உண்டு அமைச்சர்கள் கூட நிமிர்ந்து நின்ற காலம் உண்டு( இன்று அதிமுகவில் எந்த அமைச்சரும் நிமிர்ந்து நிற்க முடியாது என்பது வேறு விஷயம் !)நம்ம நிலைமை தான் பரிதாபம் நமக்கு இருக்கும் ஒரே அமைச்சர் மாண்பு மிகு பூனாட்ச்சி அவர்கள் ,அவர்களின் துறை மற்றும் அவரின் அதிகாராம் எத்தகையது என்று சொல்லி தெரிந்து கொள்ளும் நிலையில் யாரும் இல்லை ,நிற்க திருச்சி அதிமுக என்பது :குமார் பி லிட் : என்றாகி விட்டது நம்ம கட்சி "அதிமுக"வில் அப்புறும் மனோகரன் முருகன் என்ன முத்தரையரா என்று கேட்ட கடவுளின் தூதர் இந்த இருவர் என்ன செய்தாலும் ஏற்று கொள்ளும் நம்ம "அம்மா "நம்ம முன்னாள் அமைச்சர்கள் எங்கே என்று தேட வேண்டியுருக்கு பரஞ்சோதி ,சிவபதி இருக்கிற இடமே தெரியுல ,இனத்தின் அறிவு ஜீவி முன்னாள் அமைச்சர் :மா மன்னர் முத்தரையர் சிலைக்கு சொந்தக்காரர் அன்புக்குரிய திரு கு.பா அவர்கள் மிக திறமையானவர் என்று பெயரெடுத்த கு.பா அவர்களை கண்டு கொள்ளாதது நம் இனத்தின் பலம் பலவீன பட்டிருப்பதாகவே தெரிகிறது ,மீண்டும் மலை கோட்டையில் சிங்க கொடி பறக்க வேண்டும் அதற்க்கான வேலைகள் ஆரம்பிக்க வேண்டும் அடிப்போர் அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள் அது ,குமார் மற்றும் மனோகர் மீது இருக்கும் புகார்களை தொடர்ந்து கார்டன் நோக்கி அம்புகளாக சீரட்டும்உடனடியாக இல்லா விட்டாலும் பலன் கிடைக்கும் ,தொடரட்டும் அம்புகள் திருச்சி நமதாகட்டும் திரு ,கு ப அவர்கள் அமைச்சராகட்டும் அப்போதுதான் நம் தேவைகள் அவர் மூலம் கொண்டு செல்ல பட்டு நிறைவேற்ற வழி பிறக்கும் மற்றவர்கள் ஆனாலும் திரு ,கு.ப அவர்களின் அளவுக்கு கேட்டு பெற முடியாது ,முத்தரையர்கள் கட்சி கட்டு [ஆட்ட்டுக்குள் வரவேண்டுமெனின் அதிமுகவில் குபா ,திமுகவில் திரு ,என் செல்வராஜ் அவர்கள் பொறுப்புக்கு வந்தால் தவிர நம்ம நிலைமை மாறாது இருவருமே தேவைகளை தயக்கமின்றி பேச கூடியவர்கள் என்பது அப்பட்டமான உண்மை மற்றவர்கள் தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மைகள் தான் !

புதன், 30 ஜூலை, 2014

காமன் வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவுகளில் வேலூர் சத்துவாசாரியை சார்ந்த திரு ,சதீஷ் குமார் அவர்களுக்கு தமிழக அரசு ஐம்பது லட்சம் வழங்கி ஊக்கபடுதியுருக்கிறது நன்றிகளும் பரிமாற பட்டிருக்கிறது ஆனால் அதே சமயம் ஸ்பெயின் குடியுரிமை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் அவர்களுக்கு மூன்று கோடி ருபாய் பரிசளித்தது போல் தமிழகத்தை சார்ந்த வசதி குறைவான குடும்பத்தை சார்ந்தவருக்கு அதில் மூன்றில் ஒரு பங்காவது ஒரு கோடி ரூபாயாவது அறிவிக்கும் தமிழக அரசு என்கிற எதிர் பார்ப்பு இருந்தது ,அதை தான் பெரும்பாலான நண்பர்கள் கேட்கிறார்கள் ?அளவுக்கோல் ஆளுஆளுக்கு வேறு படுமா ?இல்லையெனில் இவருக்கும் அதை கிடைக்க செய்திருக்கலாமே அரசு !தமிழக தமிழனுக்கு இன்னும் செய்யுமா தமிழக அரசு !
திரு ,சதீஷ் சிவலிங்கம் அவர்களின் காமன் வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் தங்க பதக்கம்  பெற்று சாதித்து காட்டியுருகிறார் அதற்க்கு தமிழக அரசு ஐம்பது இலட்ச ருபாய் ஊக்கத்தொகையாக அறிவித்திருக்கிறது ,நன்றி தெரிவித்து கொள்கிறோம் ,ஆனால் செஸ் போட்டியில் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தற்போது ஸ்பெயின் குடியுரிமை பெற்று இருப்பவருக்கு கோடிகளை அறிவித்தது ஆகையால் நமக்கும் அந்த எதிர் பார்ப்பு இருந்தது !பரவ இல்லை இந்த லட்சங்கள் லட்சியத்தை அடைந்தற்க்கு அங்கீகாரமாக எடுத்து கொள்வோம் .நன்றிகளுடன் .
நண்பர்கள் நிறைய பேர் என்னிடம் ஏன் ப்ளாகை மறந்து விட்டீர்கள் என்பது மறக்க வில்லை நேரமின்மை மற்றும் மற்ற சமுக தளங்களில் எழுதுவதற்கே முடியவில்லை ஆகாயல்தான் மற்றபடி வேறு எதுவமில்லை ,நிற்க ,மிகந்த மகிழ்ச்சி அளிக்க கூடிய நிகழ்வு அது "தங்கம் "பதக்கம் வென்றிருக்கும் நம் முத்தரைய சிங்க இளைஞன் திரு ,சதீஷ் சிவலிங்கம் ,வேலூர் சத்துவாச்சாரியை சார்ந்த சாதனை படைத்த அவரை வாழ்த்த வார்த்தைகள் இன்றி தேட வேண்டியுருக்கிறது நெஞ்சமெல்லாம் குதுகலம் ,ஆனந்த கண்ணீர் இனிய வாழ்த்துக்கள் ,அவருக்கு சமர்பிக்கலாம் என்னோடு சேர்ந்து நீங்களும் தான் ,

சாதனை எடையை தூக்கி தற்போதய சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி காட்டியுருக்கிறார் ,அவரின் கடுமையான நான்கு வருட முயற்சி அவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தேசம் ,அனைத்து உலக தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்றால் அது மிகை இல்லை ,இது இது தான் இது போன்ற சாதனைகள் மட்டுமே நம் இணத்திருக்கும் நம் இளைஞர்களுக்கும் ஊக்குவிக்கும் எல்லோரையும் இது போல் சாதிக்க வைக்க தூண்டு கோலாக இருக்கும் ,இனியேனும் நம் இளைஞர்கள் வெறும் உணர்ச்சி குவியலாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல் படவேண்டும் ,அது அவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி ,நம் இனத்திருக்கும்  பெருமை தேடி தரும் .

இத்தகைய சாதனை புரிய பின்பலமாக இருந்த அவர்களின் பெற்றோர்க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம் !

ஞாயிறு, 15 ஜூன், 2014

திருச்சி மாவட்டம் பெரம்பலூர்  தொகுதியில் நாடாலாமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக திரு ,மருதை ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 




திங்கள், 6 ஜனவரி, 2014

https://www.change.org/en-IN/petitions/chiefminister-of-tamilnadu-chennai-india-demanding-to-issue-go-to-bring-all-29-sub-castes-of-mutharaiyar-community-under-mbc-and-15-separate-reservation-in-both-education-and-job#share
வட இந்திய முத்தரையர் பிரிவான கோலி இனத்தை சார்ந்த நண்பர் டில்லி சட்ட மன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக தேர்ந்து எடுக்க பட்டு இருக்கார் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! முத்தரையர் இணைய நண்பர்கள் குழுமம் தெரிவித்து கொள்கிறது !
கரூர் நாடாளமன்ற தொகுதியில் முத்தரையர் இன் மக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்ச்சத்து நாற்பது ஆயிரம் ,கொங்கு வெள்ளாள கௌண்டர் மக்கள் தொகை நாற்ப்பது ஆயிரம் ,நாடாள மன்ற உறுப்பினர் ,தம்பிதுரை ,கொங்கு வேளாளர் .அங்கு கரூர் அதிமுக நகர செயலாளர் நெடுஞ்செழியன் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகலாக இருக்கிறார் இந்த முறை அதிமுக அவருக்கு வாய்ப்பு கொடுக்குமா ?அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ?ஒற்றுமையுடன் கூடிய பலம் .

திருச்சி நாடாளமன்ற தொகுதியிலும் நம் மக்கள் தொகை மூன்று லட்ச்சத்து என்பது ஆயிரம் வாக்குகள் ,கள்ளர் இன் மக்கள் ஒன்றேகால் லட்சம் இங்கும் நம் இனத்தவர் நாடாளாமன்ர உறுப்பினர் கிடயாது ?முத்தரையர் இன மக்கள் யோசிக்க வேண்டிய நேரமிது ?

இந்த முறை திமுக அல்லது அதிமுக இரு கட்சிகளும் வாய்ப்பு மறுக்கும் பட்சத்தில் நம் இனம் சார்பாக ஒருமனதாக ஒருவரை தேர்வு செய்து களம் கண்டு தனியாக சுமார் ஐம்பது முதல் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றாலே வருகிற சட்ட மன்ற தேர்தலில் நம் பங்கு நமக்கு தேடி வரும் ?

இது கண்டிப்பாக முடியும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று பட்டாலே இதை சாதிக்க முடியும் ?காலம் கனிந்து வருகிறது பயன்படுத்தி கொள்வது நம் சாதுறியம் ?உறுதியோடு முடிவெடுப்போம் !இன தலைவர்கள் புரிதலோடு செயல் பட்டால் சாதியமே ?
கர்னாடக மாநிலத்தில் உள்ள முத்தரையர் இன பிரிவுகள் மொத்தம் முப்பத்தி இரண்டு ,மொத்த மக்கள் தொகை சுமார் என்பத்தி ஆறு லட்சம் ,இரெண்டு அமைச்சர்கள் இருபத்தி ஒரு சட்ட மன்ற உறுப்பினர்கள் ,ஆனால் நான்கு அல்லது ஐந்து அமைப்புகள் மாநில தலைவர்கள் ,ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இயங்கி கொண்டுருக்கிறது ,இங்கே சிலர் Aக்ரூப் ,B க்ரூப் என்று அழித்து கொண்டிருக்கிறார்களே அதேப்போல்தான் அங்கும் இருக்கும் போல !மாறனும் ,மாற்றம் மற்றுமே நிலையானது ,வாழ்வு அளிக்க கூடியது !
முன்னால் அமைச்சர் திரு ,தங்கம் தென்னரசு அவர்களுடன் ஒரு வரலாற்று பதிவில் விவாதித்த போது அவர் தந்த பதில் ,இது போன்று சில வரலாற்று ஆராய்ச்சியாளார் களிடம் கூட மாறுப்பட்ட கருத்துக்கள் இருக்கிறது முக்கியமாக திரு ,மைலை சீனி வேங்கடசாமி அவர்கள் தான் நம்மை பற்றி பெரிதாக வெளி கொண்டு வந்தார் என்பார்கள் ஆனால் அவர்களின் நிறைய புத்தகங்களை கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அலசி விட்டேன் எதிலும் தெளிவாக ஆணித்தரமாக பதிந்திருக்க மாட்டார் ஆனால் திரு ,நடன காசிநாதன் அவர்கள் தெளிவாக ஆணித்தரமாக பதிவிட்டுருப்பார் .நம் சாம்ராஜ்யத்தை குறித்து அவரை விட தெளிவாக வேறு யாரும் எழுதவில்லை ,திரு ,ராஜசேகர தங்கமணி ,திருமலை நம்பி போன்றவர்கள் கூட காசிநாதன் அவர்களின் ஆராயிச்சியை மேற்கோள் காட்டிதான் பதிந்திருபார்கள் .
இன்று jan 3 கட்டபொம்மன் பிறந்த நாளை நம் இன இளைஞர்கள் முத்தரையர் என்று கருதி கொண்டாடி வருகின்றனர் ,அவருக்கும் முத்தரையர் இனத்த்திருக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த சரித்திர ஆதாரங்களும் இல்லை ,கட்டபொம்மன் கர்நாடக மாநிலம் பெல்லாரியை ஆண்ட சின்ன குறுநில மன்னர்கள் அவர்களை விஜய நகர மன்னர்கள் போரில் வென்று அவர்களை துரத்தி அடித்த போது வாழ வழியின்றி தமிழகதிருக்குள் நுழைந்தவர்கள் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு படை உருவாக்கி பாஞ்சலகுறிச்சி பகுதியில் ஒரு சிறிய பகுதியை தலைமை ஏற்று நடத்திகொண்டிருந்தார் .ஆனால் முத்தரையர் சாம்ராஜ்யம் என்பது தமிழகத்தின் ஆரம்பம் ,முத்தரையர்கள்தான் தமிழகத்தின் அரிச்சுவடி முத்தரையர்கள் இன்றி தமிழக சரித்திரம் கிடையாது அப்படியுருக்க கட்டபொம்மன் ,பாளையக்காரன் ,நாயக்கர் என்பதால் அவர் முத்தரையர் கிடையாது ,இது போன்று தெளிவற்ற சரித்திரம் அறியாத வாய் மொழியாக சொல்லுவதை எல்லாம் நாம் கொண்டாடுவது நம் இனத்தை மேலும் பலவீன மாக காரணமாக ஆகிவிடும் .என்பதை நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் !

பாளைய காரர்கள் முத்தரையர்கள் என்றால் ,அதியமான் ,சம்புவராயர்,பாணர்கள் ,வடுகர்கள் ,என மொத்தம் ஏழு குறுநில மன்னர்கள் இருந்தனர் அவர்கள் எல்லாமே பாளயக்காரகள் என அழைக்கப்பட்டன ,அப்போ அவர்கள் எல்லோருமே முத்தரையர்கள் என்று சொன்னால் எப்படியுருக்கும் ,ஆகவே சரித்திரத்தை தெளிவாக தெரிந்து கொண்டு ,கம்மா நாய்டு வகுப்பை சார்ந்த கட்டபொம்மன் போன்றவர்களை கொண்டாடுவதை இனியேனும் நிறுத்தி கொள்ள வேண்டும் ?இன்னும் சொல்ல போனால் விஜய நகர மன்னர்கள் நாயக்கர்கள் என்றுதான் சொல்லுவார்கள் அவர்கள்தான் கட்ட பொம்மனின் முன்னோர்களை துரத்தியது ?பெல்லாரியிளிருந்து இப்படி நாயக்கர்கள் ,பாளையக்காரர்கள் என்பார்கள் எல்லாம் முத்தரையர்கள் அல்லர் என்பதை புரிந்து கொள்ளுங்கள் !

திங்கள், 25 நவம்பர், 2013


http://www.youtube.com/watch?v=xNRhYydV1A8


ஹைதராபாத் உலக மீனவர் தின கூட்டத்தில் மரியாதைக்குரிய திருமிகு ,கு.பா ,கிருஷ்ணன் அவர்களுடன் .




அக்டோபர் ஐந்தாம் தேதி நம் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபோது !

சனி, 16 நவம்பர், 2013

http://velai.net/2013/11/textron-hiring-software-enghttp://velai.net/2013/11/textron-hiring-software-engineer-in-bangalore/ineer-in-bangalore/
பெங்களுரை சார்ந்த textron நிறுவனம் மென் பொருள் பொறியாளார் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன ,ஆரவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் ,மேலும் விபரங்களுக்கு முத்தரையர் இனையம் நண்பர்கள் குழுமம் ,mutharaiyar's on internet group பதிவுகளையும் பார்க்கலாம் .

புதன், 13 நவம்பர், 2013

கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைக்கும் நம மக்கள் உழைப்பின் ஊதியத்தை பத்திரமாக காப்பற்றி கொள்வது அவசியம் வசீகர பேச்சு ,கவர்சிகரமான திட்டங்கள் என நம்பி மோசம் போவதை நம் இளைஞர்கள் எடுத்துரைத்து தடுக்க முயலுங்கள் ,நாம் எவ்வளவோ ,தொலைகாட்சி ,செய்தித்தாள் என அடிக்கடி மோசடி பேர்வழிகளையும் ,ஏமாற்றும் முறைகளை அறிந்திருந்தும் மீண்டும் மீண்டும் நம் கூடுதலாக சில கிடைக்கின்றன என்பதால் மொத்தத்தையும் கொட்டை விட்டு ஏங்குவது ,அழுது புலம்பவதில் ஒரு காரியமும் நடக்க போவதில்லை என்பதுதான் உண்மை ஆனால் நடைமுரையை புரிந்து கொள்வதில் சிக்கலால் படும் இன்னல்கள் அதிகம் ஆதலால் முன் யோசனையோடு நடந்துகொள்ள நம் இளைஞர்கள் வழிக்காட்ட வேண்டும் இதற்க்கு நாம் சில வசுவுகளை கூட கேக்க வேண்டியுருக்கும் பொறுமையாக எடுத்துரைக்க வேண்டும் ,அப்படித்தான் நம் நபர்கள் சிலர் எச்சரித்த போது உங்களக்கு பொறாமை என்று என்று பொங்கிவிட்டு லட்ச்ச கணக்கில் பணத்தையும் இழந்து விட்டு அடியாட்கள் மிரட்டல் ,உருட்டல்களால் பாதிக்கப்பட்டுருக்கிரார்கள்" பைன் பியுச்சர் "பைன் ,பைன் என்று நான்கு பேர்களில் ஒரு பினான்ஸ் கம்பனி ஏமாற்றி இருக்கிறது அதில் லட்ச்ச கணக்கில் ஏமாந்தது நம் இன மக்கள் என்பது மிகவும் வேதனைக்குரியது ,மேலும் சிலர் முகவர்களாக முன்னின்று வசூல் செய்து கொடுத்தும் மாட்டிக்கொண்டிருக்கிரார்கள் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை போல் மற்ற மாவட்ட மக்களும் ஏமாறாமல் பார்த்து கொல்லுங்கள் ,குறிப்பாக நாமக்கல் முதல் கோவை வரை உள்ளவர்கள் ,இந்த மோசடி கும்பல் பொங்கல் சமயத்தில் மாநிலம் முழுவதும் கடை விரிக்கும் ஆகவே இப்போதே உற்றார் உறவினர் நண்பர்கள் என்று அனைவரிடமும் சொல்லி வைத்து விடுங்கள் போனால் வராது காரணம் மேல் மட்டம் முதல் கிழே வரை உள்ளவர்கள் சேர்ந்து நடத்துவது தான் இந்த பித்தலாட்டம் .

ஞாயிறு, 10 நவம்பர், 2013

புதுடெல்லி,: பேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் போன்ற ஆன்லைன் சமாச்சாரங்களில் நீங்கள் வலம் வந்தால், கொஞ்சம் உஷாராக இருங்க. மத்திய அரசின் கழுகு கண்காணிப்பு அதிகரித்தபடி உள்ளது. அரசுக்கு, நாட்டுக்கு எதிராக, அவதூறு கிளப்பும் வில்லங்க கணக்குகளை நீக்க மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஆரம்பித்துள்ளன.  பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பதிவு செய்து கணக்கை ஆரம்பிக்கலாம்.

 நண்பர்கள், உறவினர்களுடன் படங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதை தாண்டி, இப்போது ட்விட்டரை போல பொதுவான கருத்துக்கள் பேஸ்புக்கில் வலம் வருகின்றன.  அடையாளம் தெரியாத நபர்கள் பலரும் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலை இருப்பதாக பலரும் எண்ணினாலும், உண்மையில் சைபர் கிரைம் போலீசில் இருந்து மத்திய அரசின் உளவுத்துறை அமைப்புகள் வரை கண்காணித்தபடி உள்ளன. நாட்டுக்கு எதிராக, சமூகத்துக்கு எதிராக, வன்முறையை தூண்டுவதாக அமையும் விமர்சனங்களை அரசு ஏஜன்சிகள் கண்காணிக்கின்றன. அதுபோல, தனிப்பட்ட விமர்சனங்கள் கூட கண்காணிக்கப்படுகின்றன. 

அதனால் தான் சிலர் லைக் போட்டாலும் கூட சிக்கிக்கொள்கின்றனர். எப்போதாவது இப்படி சர்ச்சை கிளம்பி, சிலர் லைக் போட்டதற்காக கைதாவது, வழக்கை சந்திப்பது என்பது நடந்து தான் வருகிறது. இதன் பின்னணியில் அரசின் புலனாய்வு ஏஜன்சிகள் உள்ளன.  பல நாடுகளும் இப்படி கண்காணிப்பை செய்தாலும், இந்த விஷயத்தில் இந்தியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது, அதிக கண்காணிப்புள்ள நாடு என்ற பெயர் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

 
  இந்த அறிக்கைகளில் இருந்து கிடைத்த சில முக்கிய தகவல்கள்: 
* பேஸ்புக்கில் உள்ள அக்கவுன்ட்கள் தொடர்பாக 3200 வேண்டுகோள்கள் , இந்திய  அரசிடம் இருந்து வந்துள்ளது. அதில் 50 சதவீதத்துக்கு மேல்     பதில் அனுப்பப்பட்டுள்ளது. 
* பேஸ்புக்கில் எந்த ஒரு கணக்கையும் அரசு தடை செய்ய  சொல்லவில்லை. மாறாக, கண்காணிப்பை அதிகரித்துள்ளது. 
* மைக்ரோசாப்ட் அக்கவுன்ட்களில் 413 கணக்குகள் யாருடையது என்பதில் இருந்து தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. 
* இதுபோல, ஸ்கைப் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் 102 பேர் பற்றிய தகவல்களை கேட்டு பெற்றுள்ளது. 
* ஆப்பிள் நிறுவனம், மத்திய அரசு கேட்டதில்,   41 சதவீத தகவல்களை கடந்த ஆறு மாதத்தில் அனுப்பியுள்ளது. 
* மொத்தம் 41 நாடுகள் இப்படி தகவல்களை கேட்டு பெற்று வருகின்றன. அவற்றில் முதலில் உள்ளது அமெரிக்கா;  இரண்டாவது இந்தியா. 
* அமெரிக்கா 8605 பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்கள் பற்றி தகவல் கேட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து கண்காணிக்கிறது. 
* இந்தியாவை பொறுத்தவரை, மத்திய கண்காணிப்பு மையத்தை ஆரம்பிக்க உள்ளது. அது முழு அளவில் இயங்க ஆரம்பித்தால், பேஸ்புக், ட்விட்டர்   அக்கவுன்ட்களை தன்னிச்சையாக கண்காணிக்கலாம். 
* பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இருந்து தகவல்களை பெற மட்டும் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். சுயமாக கண்காணிக்க அரசுக்கு இந்த   நிறுவனங்கள் அனுமதி தரவில்லை.
* கடந்த சில மாதங்களில் 60 ட்விட்டர் கணக்குகளை ரத்து செய்ய மத்திய, மாநில  அரசுகள் கேட்டுள்ளன.

திங்கள், 4 நவம்பர், 2013

இது ஒரு அறிய வாய்ப்பு நம் இனத்திருக்கு ,நமது நீண்ட நாள் கோரிக்கையான இருபத்தி ஒன்பது பிரிவுகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைப்பது ,உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 15% தனி ஓதிகிடு ,மற்றும் நமக்கு வாய்ப்புள்ள பெரம்பலூர் ,திருச்சி ,சிவகங்கை ,விருதுநகர், தஞ்சை ,திண்டுக்கல் ,வேலூர் நாடாள மன்ற தொகுதிகளில் நம் இனத்தின் வேட்ப்பாளர்களை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் ,சென்னையில் மணிமண்டபம் ,மதுரை ,புதுக்கோட்டை ,வேலூர் போன்ற நகரங்களில் மன்னர் சிலை நிறுவ வேண்டும் இந்த கோரிக்கைகள் வென்றுஎடுக்க இதுதான் சரியான சமயம் ,யுணர்ந்து செயல்படுவது அவசியம் !
சில அமைச்சர்களின் புகைப்படங்கள் குறிப்பாக ,நம் இனத்தின் முதல் ,அமைச்சரான திரு ,கோவேந்தன் , அதிமுக                                                                     திரு ,துரை ,சந்திரசேகரன் திமுக (மதிமுக சென்றார் ) ,                                                           திரு,புலவர் ,செங்குட்டுவன் திமுக ,தற்போது (அதிமுக )
திரு ,அண்ணாவி அதிமுக
திரு ,கே ,கே பாலசுப்ரமணியன் அதிமுக
போன்றோரின் புகைப்படங்கள்  சேகரித்து வருகிறோம் அடுத்த பதிவில் மீதி அமைச்சர்கள் !
தற்போதைய அமைச்சர் -திரு ,டி,பி ,பூனாட்சி ,மணச்சநல்லூர் தொகுதி ,திருச்சி .
திரு ,என் ஆர் ,சிவபதி ,அதிமுக (இருமுறை  அமைச்சர் ) 2012.முசுறி தொகுதி ,திருச்சி மாவட்டம் .பள்ளிகல்வி ,தொல்வியல்,இளைஞர் மேம்பாடு ,விளையாட்டு துறை சிறைத்துறை ,நீதி நிர்வாகம் ,சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அமைச்சர் .

திரு ,பரஞ்சோதி  அதிமுக, திருச்சி மேற்கு தொகுதி -06/11/2011-08/11/2011.          
முன்னாள் அமைச்சர் ,இந்து அறநிலையம்,பள்ளிகல்வி ,இளைஞர் மேம்பட்டு துறை மற்றும் சட்டம் -நீதித்துறை .
திரு ,ஆலங்குடி, வெங்கடாசலம்,அதிமுக ,புதுக்கோட்டை மாவட்டம் . முன்னாள்  சுற்றுலா துறை அமைச்சர் 2001-2006 .
திரு ,கு .ப ,கிருஷ்ணன் ,அதிமுக முன்னாள் விவசாய துறை அமைச்சர் 1991-96.ஸ்ரீ ரங்கம் தொகுதி திருச்சி மாவட்டம் .
முத்தரையர் இன அமைச்சர்கள் ஒரு பார்வை ;-

திரு ,என் ,செல்வராஜ் B.E, திமுக .-முன்னாள் வனத்துறை அமைச்சர் -2006-2011.மணச்சநல்லூர் தொகுதி ,திருச்சி .மாவட்டம்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

தமிழ் நாடு முத்தரையர் சங்க தலைவர் திரு ,குழ ,செல்லையா அவர்கள் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய போது இருந்த ஆறு  உறுப்பினர்களில் ஒருவர் ,ஆக அதிமுக நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் அதேப்போல் அதிமுக ஆரம்பிக்கப்பட்டபோது பேராயுரணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த குழ ,செல்லையா அவர்கள் தான் அதிமுகவில் சேர்ந்த முதல் அதிமுக உறுப்பினர் ,

அதிமுக நிறுவன உறுப்பினரான குழ ,செல்லையா நியாயமாக மாநில பொறுப்பில் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவருக்கு தஞ்சை மாவட்ட செயலாளார் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்பது அதிமுகவின் வரலாறு "முத்தரையர் "கள் எப்போதுமே களபணியாலார்களாகவே இருக்க மட்டுமே லாயக்கு என்று அப்போதே முடிவெடுத்துவிட்டார்கள் அன்றில் இருந்து இன்று வரை இதுதான் நிலைமை ,இத்தனைக்கும் புதுக்கோட்டையில் 12/08/1979 ,அன்று நடந்த முதல் "முத்தரையர் " மாநில மாநாட்டில் எம்ஜியார் கலந்துக் கொண்டார் முத்தரையர் உட்பிரிவுகளை ஒரிங்கினைத்து சாதி ஒழிப்பு மாநாடு என்று சொலப்பட்ட மாநாடு எம்ஜியார் முன் மிகவும் பிற்படுத்தப்பாடவர்களுக்கு 9000ருபாய் உச்ச வரம்பாக கொண்டு வந்து தீர்மானாமாக நிறைவேற்றப்பட்ட மாநாடு ,இதை எல்லாம் செய்தவருக்கு அதிமுக ஆட்சி வந்தவுடன் நியாயமாக அவருக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் வழங்கப்படவில்லை ,எம்ஜியார் காலத்தில் கோவேந்தனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது ,ஆனால் மற்ற இனத்திருக்கு எத்தனை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்று பார்த்தால் தெரியும் நம் இனத்தின் நிலைமை அடித்து கூறுகிறேன் நம் இனம் அதிமுகவிற்கு வாக்களித்தது போல் எந்த இனமும் வாக்கு அளித்தது இல்லை ஆனால் மற்ற இனத்தை விட குறைவாக பலன் அடைந்த இனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றால் அதுவும் முத்தரையர் இனம் தான் .

முத்தரையர் இனத்தின் இருபத்தி ஒன்பது உட்பிரிவுகளை இணைத்து அரசானை பிற்பித்தது,திருச்சி மாவட்டத்துக்கு மன்னர் பெயரை சூட்டியது தவிர வேறு எதுவும் உருப்படியாக செய்தார்கள் என்று சொல்ல முடியவில்லை ,இன்னும் சொல்ல போனால் அதிமுக ஆட்சி காலம் முழுவதும் நம் இனத்தவர்கள் அமைச்ச்கர்களாக இருந்தார்களா என்பதே கேள்விகுறி ? அல்ல உண்மை !
ஆனால் எனக்கு தெரிந்து வெறும் பதினைந்து சதவீதம் வாக்குகள் மட்டுமே பெரும் திமுக ஆட்சி காலம் முழுவதும் அமைச்சர்கள் இருந்து இருக்கிறார்கள் ,திரு ,துரை ,சந்திர சேகரன் ,புலவர் செங்குட்டுவன் ,திரு என்,செல்வராஜ் என இவர்கள் அனைவரும் ஐந்தாண்டுகள் அமைச்சர்களாக இருந்தவர்கள் தான் ,இருவர் தமிழ்நாடு தேர்வாணைய குழு உறுப்பினர்களாகவும் இருந்தனர் ,வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சிற்றரசு மாளிகை பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது ,சென்ற திமுக ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரையர்களை மிகவும் பிற்படத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது என பலவற்றை செய்திருக்கிறது .
விஷயத்துக்கு வருவோம் இப்போது முத்தரையர் சங்கம் வேண்டுகிறது அம்மா ,திரு ,குழ ,செல்லையா அவர்களுக்கு ஒரு ஒரு நல்ல பொறுப்பு வழங்குங்கள் என்று கெஞ்சும் நிலைமை தான் இன்று அவருக்கு ,யாருக்கு அதிமுகவின் நிறுவன அருவர்களில் ஒருவரான அவருக்கே இதுதான் நிலைமை !
மறந்துடாதிங்க நடப்பது நமது ஆட்சி !ஒரு பொறுப்புக்கு கெஞ்சிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து விடக்கூடாது !இருப்பது ஒரு மந்திரி அவரும் எப்போ மாற்றப்படுவார் என்று தெரியாது என்பது வேறு விஷயம் ,ஆனால் தமிழகத்தின் இன்றைய மக்கள் தொகையில் ஏறக்கொறைய இரண்டு கோடியே நாற்ப்பது லட்சம் பேர் சார்ந்தது முத்தரையர் இனம் நமக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்கிறதா ? கொஞ்சம் யோசித்து பாருங்கள் குறிப்பாக இளைஞர்கள் ,இனியேனும் முழித்துகொள்வோம் ,கட்சி என்பதை நாம் இனி எந்த கட்சி நம் இனத்திருக்கு வாய்ப்புகள் தருகின்றனவோ அவர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம் இல்லயேல் எந்த கட்சியானாலும் புறகணிப்போம் ,அதற்காக கறிவேப்பிலையாக நம்மை பயன்படுத்தி கொள்ள ஒரு சில அமைப்புகள் ,"கட்சி " செயல் படுகிறது அந்த கட்சியால் நமக்கு ஒரு பயனும் இருக்கப்போவதில்லை ஜெயத்தப்பின்னர் நம்மை மனிதர்களாக கூட மதிக்க மாட்டார்கள் அவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் அவர்கள் வளர்வதருக்கு நாம் காரணியாக இருக்கபோகிறோம் அவ்வளவுதான் !அப்படிப்பட்ட கட்சிகள் பின்னாடி செல்வதருக்கு பதில் நம் இனம் தனித்தே போட்டியுட வேண்டும் பலப்டுத்திக்கொள்ள வேண்டும் அதுதான் நமக்கு பிற்காலத்தில் பலன் அளிக்கும் !சிந்திப்போம் !வளம் பெறுவோம் ".

   

வெள்ளி, 1 நவம்பர், 2013

அனைவருக்கும் இதயம் கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள் !
"தேசம் அண்டே மட்டி காது மனுஷுலே " என்று மக்கள் போராளி என்று ஆந்திராவில் அழைக்கப்பட்ட அல்லுரி சீத்தா ராமராஜு முழங்கிய முழக்கம் ஒட்டு மொத்த ஆந்திர மாநிலம் முழக்க ஒன்றிணைத்த முழக்கம் ,அது "தேசம் என்றால் வெறும் மண் இல்லை ,மக்களே " என்பது அதன் அர்த்தம் அது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் என்பதை கோர சண்டாளன் மக்க போகும் ராஜபக்ஷேவின் செய்கைகள் உணர்த்துகிறது அவனை பொறுத்தவரை "ஈழம்"என்பது வெறும் மண் மனிதர்கள் அல்ல என்பதை" இசை ப்ரியாவின் " கொடுமையான மரணம் மூலம் நிருபித்து இருக்கிறான் ,ராஜீவ் காந்தி மரணம் என்பது கொடுமையானது என்பது மனிதர்கள் யாரும் மறுக்கவில்லை அதற்காக ஒட்டு மொத்த ஈழ தமிழர்களையும் அழிப்பதற்கு துணை போகும் இந்தியாவின் அதிகார வர்கத்திருக்கு என்னை அரித்து கொண்டே இருக்கும் ஒரே கேள்வி இந்தியாவை உலக அளவில் கொண்டு சென்ற "அன்னை இந்திரா காந்தியை "அவரின் வீட்டில் வைத்தே கொன்ற சீக்கிய மக்கள் அனைவரையும் இப்படியா கொன்று குவித்தது இந்தியா ,அந்த இனத்தை சார்ந்த இன்றைக்கு இலங்கை செல்வேன் என்று அடம்பிடிக்கிற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமராக வித்து அழகு தானே பார்த்து கொண்டிருக்கிறோம் அதையாவது சிந்தித்து பார்த்து அந்த டர்பன் வீரர் முடிவெடுத்து இருக்கவேண்டியவர் இப்படி திருவிழாவிருக்கு செல்ல அடம்பிடிக்கும் குழந்தை போல் முடிவெடுப்பது வெக்க கேடான விஷயம் மனிதாபிமான அற்ற ஒரு ரோபோ என்றே சொல்ல தோன்றுகிறது !இலங்கையில் காட்டும் வீரத்தை அதிகார வர்க்கம் பஞ்சாபில் காட்ட முயன்றால் அதன் விளைவுகள் எப்படியுருக்கும் என்று தெரியும் ஆனால் தமிழன் என்றால் மாட்டும் பொத்துகிட்டு வருது "உணர்ச்சிகள் ", உணர்ச்சிகள் என்பது எல்லா மனித ராசிகளுக்கும் ரத்தத்தில் கலந்திருப்பது வெடிக்கும்போது சரியான படிப்பினை கற்க போவது நிச்சயம் அதற்க்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு !பஞ்சாபை இங்கே ஒப்பிடுவது அங்க காட்டும் மனதாபிமானம் தமிழனக்கும் காண்பிக்கவேண்டும் என்பதற்காக மட்டும்தானே வேறில்லை !

வியாழன், 31 அக்டோபர், 2013

திருச்சிற்றம்பலம் ,பேராவுரணி தாலுகா ,தஞ்சை மாவட்டம் முற்றிலும் முத்தரையர் இன மக்கள் வாழும் ஊராக இருந்தும் ,இதுவரை எந்த ஒரு இனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் பதாகைகள் வைக்கப்பட்டதில்லை ஆனால் அந்த ஊரில் ஒரு பாக்கரியில் வேலை செய்ய வந்த சில கள்ளர் இனத்தவர் தேவர் குரு பூஜைக்காக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டு ஊரின் நலன் கருதி அதை அகற்றி இருக்கிறார்கள் ஆனால் மீண்டும் நரித்தனமாக நாளைக்கு விழா என்றால் நானகைந்து பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன அந்த ஊரில் முக்கியமான சிலருக்கு அவர்கள் சார்ந்திருக்கிற முக்கியமான மேல் பதவியில் இருப்பவ்ரகளிடமிருந்து கேள்வி கேடுர்கிறார்கள் அந்த ஊரின் தலைவரும் கூட துடிப்பாக இருப்பவர்கள் சிலர் கூறுகிறார்கள் என்று கூறிவிட்டு ஒதுங்கிவிட்டார் ,கடைசியாக நமக்கு தகவல் கிடைத்து நடவடிக்கை எடுக்க முயற்சித்தாலும் அந்த ஊரில் நின்று செய்ய ஆட்கள் இல்லாததால் அதை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் நிறைவேறவில்லை ,பக்கத்தில் இருக்கிற திருவாரூர் மாவட்டத்தில் சென்ற மாதம் நம் மன்னரின் பதாகைகள் கிழித்து எறியப்பட்டன ஆனால் இன்று நாம் ஒன்றும் செய்ய வில்லை நாம் கேட்பது காவல்துறை இதற்க்கு எப்படி அனுமதி அளித்தது என்பது தான் பெரும்பான்மை மக்களின் உணர்சிகளை தூண்டும் அளவுக்கு வைக்கப்ப்ட்டுருபதை அனுமதி அளித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது காரணம் அவர்களிடம் அதிகாரம் ,காவல்துறை என்று எல்லாம் இருக்கிறது ஆட்டம் போடுகிறார்கள் .அனால் நம்மிடம் இருப்பது வெறும் வாக்கு வங்கி மட்டும்தான் அதுவும் கண்ணை மூடிக்கொண்டு போட்டுவிட்டு விட்டத்தை அண்ணாந்து பார்த்துகொண்டு வெந்ததை தின்றுவிட்டு விதியை நொந்துக்கொண்டோ ?அல்லது எவனாவுது செய்ய முன்வந்தால் அதோ அவன்தான் என்று கையை காண்பித்து விட்டு வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் நமது வேலை ,அல்லது அவர்களை அழித்து விட்டு நாம் வரலாமா ,இல்லை அவனைப்போல் நாம் செய்யாலாம் அவன் நாச ம போகட்டும் என்று வாய் மூடி இருப்பதுதான் நமது வேலை இங்கே கூட சில குள்ள நரிகளை நான் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் அவர்கள் ஆனால் அவர்கள் நான் இந்த குழுமத்தில் இல்லை என்னை நீக்கிவிட்டார் என்று ஒப்பாரி வைத்தவர்கள் தான் அவரை என்னால் காட்டமுடியும் என்றாலும் அதை செய்ய மாட்டேன் அதேபோல்தான் இன்றிய இனத்தின் நிலை ஆகையால்தான் நாம் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பது நாம் தான் என்பது அப்பட்டமான உண்மை இருந்தாலும் அதை களைய எடுக்கும் நடவடிக்கைகள் அத்தனையும் நம்மவர்கல்லேயே தடுக்க படுகின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை ,யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் நடப்பது நம்ம ஆட்சி என்பார்கள் ஆனால் அத்தனை அடக்கு முறைகளும் நடப்பதும் இந்த ஆட்சிய்ல்தான் கேட்டால் நீ திமுக என்று சொல்வது உண்மையை சொன்னால் சிலர் திசை திருப்பவதும் இதுதான் சாக்கு இன்னும் சிலர் அவர்கள் பங்குக்கு ஆடுவதை தவிர ஒன்றும் நடக்கபோவதில்லை ,இனியேனும் விழித்துக்கொண்டு இந்த தேர்தலில் நமக்கு யார் அதிகம் வாய்ப்பு அளிக்கிரர்களோ அந்த கட்சிக்கோ இல்லாவிட்டால் நாம் தனித்து நின்று நம் பலத்தை காட்டவேண்டும் தவிர்த்து கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து விட்டு கூனி குறுகித்தான் நிற்க வேண்டும் !இதை சொல்லுவதால் நீ திமுக என்றால் சொல்லுபர்களை பார்த்து பரிதாப படுவதை விட ஒன்றும் செய்ய முடியாது ,இனம் தான் பெரியது !கட்சிகள் எல்லாம் அப்பாற்பட்டவை அது எந்த கட்சியாக இருந்தாலும் !
திருச்சிற்றம்பலம் ,பேராவுரணி தாலுகா ,தஞ்சை மாவட்டம் முற்றிலும் முத்தரையர் இன மக்கள் வாழும் ஊராக இருந்தும் ,இதுவரை எந்த ஒரு இனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் பதாகைகள் வைக்கப்பட்டதில்லை ஆனால் அந்த ஊரில் ஒரு பாக்கரியில் வேலை செய்ய வந்த சில கள்ளர் இனத்தவர் தேவர் குரு பூஜைக்காக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டு ஊரின் நலன் கருதி அதை அகற்றி இருக்கிறார்கள் ஆனால் மீண்டும் நரித்தனமாக நாளைக்கு விழா என்றால் நானகைந்து பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன அந்த ஊரில் முக்கியமான சிலருக்கு அவர்கள் சார்ந்திருக்கிற முக்கியமான மேல் பதவியில் இருப்பவ்ரகளிடமிருந்து கேள்வி கேடுர்கிறார்கள் அந்த ஊரின் தலைவரும் கூட துடிப்பாக இருப்பவர்கள் சிலர் கூறுகிறார்கள் என்று கூறிவிட்டு ஒதுங்கிவிட்டார் ,கடைசியாக நமக்கு தகவல் கிடைத்து நடவடிக்கை எடுக்க முயற்சித்தாலும் அந்த ஊரில் நின்று செய்ய ஆட்கள் இல்லாததால் அதை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் நிறைவேறவில்லை ,பக்கத்தில் இருக்கிற திருவாரூர் மாவட்டத்தில் சென்ற மாதம் நம் மன்னரின் பதாகைகள் கிழித்து எறியப்பட்டன ஆனால் இன்று நாம் ஒன்றும் செய்ய வில்லை நாம் கேட்பது காவல்துறை இதற்க்கு எப்படி அனுமதி அளித்தது என்பது தான் பெரும்பான்மை மக்களின் உணர்சிகளை தூண்டும் அளவுக்கு வைக்கப்ப்ட்டுருபதை அனுமதி அளித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது காரணம் அவர்களிடம் அதிகாரம் ,காவல்துறை என்று எல்லாம் இருக்கிறது ஆட்டம் போடுகிறார்கள் .அனால் நம்மிடம் இருப்பது வெறும் வாக்கு வங்கி மட்டும்தான் அதுவும் கண்ணை மூடிக்கொண்டு போட்டுவிட்டு விட்டத்தை அண்ணாந்து பார்த்துகொண்டு வெந்ததை தின்றுவிட்டு விதியை நொந்துக்கொண்டோ ?அல்லது எவனாவுது செய்ய முன்வந்தால் அதோ அவன்தான் என்று கையை காண்பித்து விட்டு வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் நமது வேலை ,அல்லது அவர்களை அழித்து விட்டு நாம் வரலாமா ,இல்லை அவனைப்போல் நாம் செய்யாலாம் அவன் நாச ம போகட்டும் என்று வாய் மூடி இருப்பதுதான் நமது வேலை இங்கே கூட சில குள்ள நரிகளை நான் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் அவர்கள் ஆனால் அவர்கள் நான் இந்த குழுமத்தில் இல்லை என்னை நீக்கிவிட்டார் என்று ஒப்பாரி வைத்தவர்கள் தான் அவரை என்னால் காட்டமுடியும் என்றாலும் அதை செய்ய மாட்டேன் அதேபோல்தான் இன்றிய இனத்தின் நிலை ஆகையால்தான் நாம் இன்றைய தேதிக்கு தமிழகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பது நாம் தான் என்பது அப்பட்டமான உண்மை இருந்தாலும் அதை களைய எடுக்கும் நடவடிக்கைகள் அத்தனையும் நம்மவர்கல்லேயே தடுக்க படுகின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை ,யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் நடப்பது நம்ம ஆட்சி என்பார்கள் ஆனால் அத்தனை அடக்கு முறைகளும் நடப்பதும் இந்த ஆட்சிய்ல்தான் கேட்டால் நீ திமுக என்று சொல்வது உண்மையை சொன்னால் சிலர் திசை திருப்பவதும் இதுதான் சாக்கு இன்னும் சிலர் அவர்கள் பங்குக்கு ஆடுவதை தவிர ஒன்றும் நடக்கபோவதில்லை ,இனியேனும் விழித்துக்கொண்டு இந்த தேர்தலில் நமக்கு யார் அதிகம் வாய்ப்பு அளிக்கிரர்களோ அந்த கட்சிக்கோ இல்லாவிட்டால் நாம் தனித்து நின்று நம் பலத்தை காட்டவேண்டும் தவிர்த்து கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து விட்டு கூனி குறுகித்தான் நிற்க வேண்டும் !இதை சொல்லுவதால் நீ திமுக என்றால் சொல்லுபர்களை பார்த்து பரிதாப படுவதை விட ஒன்றும் செய்ய முடியாது ,இனம் தான் பெரியது !கட்சிகள் எல்லாம் அப்பாற்பட்டவை அது எந்த கட்சியாக இருந்தாலும் !

பிறந்தநாள் விழாவில் கலவர வழக்கு முத்தரையர் சங்க தலைவர் உள்பட 57 பேர் விடுதலை

பதிவு செய்த நேரம்:2013-10-31 
திருச்சி கோர்ட் தீர்ப்பு
திருச்சி, : பெரும் பிடுகு முத்தரையரின் பிறந்தநாள் விழா 2011 மே மாதம் 23ம் தேதி திருச்சியில் நடந்தது. பல்வேறு அரசி யல் கட்சியினர் ஒத்தக்கடையில் உள்ள முத்தரையரின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முத்தரை யர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை அணி விப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஊர் வலம் நடந்தது. அப்போது ஊர் வலம் சென்ற பகுதி யில் ஏற்பட்ட கலவரத்தில் சத்தி ரம், காந்தி மார்க்கெட், பாலக்கரை, கன்டோன்மென்ட் பகுதியில் பொது மக்கள் பலர் காயமுற்றதா கவும், அரசு மற்றும் தனி யார் பஸ்கள், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் காந்தி மார்க் கெட் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விஸ்வநாதன் உள்பட 57 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு 2வது கூடுதல் சார்பு நீதிமன்றத் தில் நடந்து வந்தது. இதில் விசாரணை முடி வுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதி பதி விஜயகுமார் வழங்கிய தீர்ப்பில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் தமிழ் நாடு முத்தரையர் முன் னேற்ற சங்க மாநில தலை வர் விஸ்வநாதன் உள்பட 57 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்
.

புதன், 30 அக்டோபர், 2013




கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர். "முத்தரையர்" என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு காலம் ஆண்டார்கள்? இப்பொழுதுள்ள முத்தரையர் என்ற பெருங்குடி மக்களுக்கும், அக்கால முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு? முத்தரையர் என்ற சொல் எதைக் குறிக்கிறது? என்றெல்லாம் மிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்த ஆசிரியப் பெருமக்கள் உண்டு. இந்த ஆராய்ச்சியை அண்மையில் நான் மேற்கொள்ள நேர்ந்த போது தமிழக வரலாற்றில் இதுகாறும் தெளிவாராத பல உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு; "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். 
இவர்கள் வேங்கடத்தை ஆண்ட சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள்(0268. களப்பாளர், களப்பளார், களப்பிலார், களப்பிரர்  நன்றி http://internationalkallarperavai.blogspot.com/2009/12/kallar-ena-patta-peyargal.html). கி.பி. 4ஆம் நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து. 
முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர். 
ஏறக்குறைய 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்). 
சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ஸ்ரீமத் கொங்கணி விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன) என்று குறிக்கறான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது "கொங்கணி முத்தரசரு" என்று கூறுகிறான்
இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்டமுதலாம் சிவமாறன் என்ற கங்கமன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது. 
முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். 
உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. 
அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் "நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி" (அகம் 44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத் தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடி சூட்டியுள்ளார்கள். 
கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும், சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.
அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா) என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்" என்றும், தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம். 
நன்றி :http://tamilartsacademy.com/books/tavam/chapter43.xml

திங்கள், 28 அக்டோபர், 2013

முன்னாள் திமுக அமைச்சர் மருங்காபுரி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட திரு ,புலவர் செங்குட்டுவன் அதிமுகவில் இன்று அக்கட்சியின் பொதுசெயலாளர் முன் தன்னை இனைத்துக்கொண்டார் ,சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என் நேரு மீது அதிருப்தி தெரிவித்து பத்திரிக்கையில் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது !இவர் சேரும்போது பரிதி இளம்வழுதி உடன் இருந்தார் ,இவரும் சம்பித்தில் திமுகவி விட்டு வெளியேறி அதிமுகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிட தக்கது .

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

ஜல்லிக்கட்டு ,நடைபெறும் இடங்கள் .

தமிழர்களின் வீர விளையாட்டான மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.இப்படிப்பட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சீரோடும் ,சிறப்போடும்நடத்துவது மன்னர் பரம்பரையில் தோன்றிய "முத்தரையர்" இனம் என்பது இன்னும் வெளி உலக்குக்கு தெரிய வராத ,தெரியபடுத்திகொள்ள அறியாத " முத்தரையர் "  இனம் ,என்பதை இனியேனும் நாம் வெளிகொண்டுவருவோம் !                                                                                                         ஆண்டு தோறும் ஜன., 14ல் அவனியாபுரத்திலும், ஜன.,15ல் பாலமேட்டிலும், ஜன.,16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு அடுத்தடுத்து நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளை களம் இறக்குவர்.                                                                    மதுரை தவிர்த்து தமிழகத்தில் திருவாப்பூர், வேந்தன்பட்டி பொன்அமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்)  சிரவயல்(காரைக்குடி மாவட்டம் ) கண்டுப்பட்டி (சிவகங்கை )பல்லவராயன் பட்டி (கம்பம் ) கொண்டலாம்பட்டி ,தம்மம்பட்டி (சேலம் மாவட்டம் )போன்ற இடங்களில் நடைப்பெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தமானது .                 





சனி, 26 அக்டோபர், 2013

அதிமுக தலைமை வருகின்ற நாடாளமன்ற தேர்தல் களத்தில் போட்டியுட அந்த அந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் வேட்பாளர்களை பர்ந்துரை செய்யும்படி கூறி வேட்பாளர்கள் பட்டியல் ஒன்றை வாங்கியுருப்பதாக பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது அதில் பார்த்தால் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளமன்ற தொகுதிக்கு என்று மாவட்ட நிர்வாகிகள் அதில் அமமைச்சர் திரு ,பூனாட்சி அவர்களும் அடக்கம் அதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ,திரு ,கே ,கே ,பாலசுப்ரமணியன் அவர்களின் பெயரும் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ,திரு ,பிரின்ஸ் தங்கவேல் அவர்களின் பெயர்கள் மட்டுமே "முத்தரையர் " இனம் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட  பெயர்களாக இருக்கிறது ,திருச்சி தொகுதிக்கு முத்தரையர்கள் யாரும் பரிந்துரைக்க பட்டதாக தெரியவில்லை ,தவிர சிவகங்கை தொகுதியுளும் யாரும் பரிந்துரைக்கப்பட்டதாக தெரியவில்லை ,ஆனால் இந்த தொகுதி "முதரையர்களுக்கு " ஒதுக்க கோரி முத்தரையர் சங்கம் முடிவெடுத்து முதல்வரிடம் கேக்கவேண்டும் என்று செய்தி பத்திரிக்கைகளில் வந்துள்ளது அப்படியும் அது போன்ற பரிந்துரைகள் இருப்பதாக தெரியவில்ல்லை ,தமிழகத்தில் உள்ள  நாற்ப்பது தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே முத்தரையர்கள் இருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது சரியா ?ஒவுவுருவோரும் கேட்டு கொள்ள வேண்டிய தருணம் இது !

இன்றைக்கு தேதியில் தமிழகத்தில் இருபத்தி ஒன்பது பிரிவினரையும் சேர்த்து கிட்ட தட்ட இரண்டு கோடியே நாற்ப்பது இலட்சம் பேர் உள்ளனர் ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுகவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும் வேதனையான ,வருத்தப்படக்கூடிய விஷயம் !

இன்றைக்கு இருபத்தி ஒன்பது பிரிவினரும் முதலில் "முத்தரையர்கள் " சொல்லிகொல்கிரமோ என்று யோசித்து பார்த்தாலே நமக்கு உள்ள அவல நிலைகள் நன்றாக புரியும்  பாடுபட்டு ஒரு அரசு ஆணை பெற்று தந்தால் அதை இன்று அதை உடைக்க ஒரு கும்பல் புறப்பட்டுள்ளது அவர்கள் வலையர் ,அம்பலக்காரர் என்று பிரிக்க இன்றைய இளைஞர்களை உசுப்பி விடுவதும் அதை புரிந்து கொள்ளாமல் இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு வலையர் ,அம்பலக்காரர் ,முத்துராஜா ,என்று கூறுவதை நிறுத்தி எல்லோரும் "முத்தரையர் "என்று ஒன்றுப்பட்டு சொன்னால் தவிர விடிவு என்பது வராது ,நம்மை கூறுபோட தூண்டு பவர்களை ஒடுக்க வேண்டும் இந்த இனத்தை கூறு போட எவனுக்கும் உரிமை கிடையாது இவர்கள் நாலு எலும்பு  துண்டுகளை பெருவதருக்கு இனத்தை கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது !

"முத்தரையர் " என்று சொல்லுவோம் ,முன்னேறி செல்லுவோம் !

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ,இல்லயேல் அனைவருக்கும் தாழ்வே " இதை மனதில்  நிறுத்தி ஒன்று படுவோம் !வெற்றி பெறுவோம் !

நமக்கு உண்டான தொகுதிகளை ஒதுக்காத பட்ச்சத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போல் அனைவரும் கூடி ஆலோசித்து தனித்து போட்டியுட்டு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பலத்தை காட்டினாள் வருங்காலம் நம் காலம் தான் !

வெள்ளி, 25 அக்டோபர், 2013

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த மறைக்கப்பட்ட முத்தரையர் வரலாறு என்பது என்பது அருப்புக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த நண்பர் சிங்கராஜ் அவர்கள்  தற்போது பினாங்கு மலேசியா நாட்டில் வசிக்கிறார் ,அவர் பலமுறை தொடர்புக்கொண்டு பேசிய பின் நம் இணையதளத்தில் போட கேட்டுக்கொண்டார் நாமும் அவருக்கு உடனடியாக இணையதளத்தில் போடா முடியாது ஆனால் முகநூல் முத்தரையர் இணைய குழுமத்தில் வெளியுடுகிறோம் என்று கூறி ஜூன் மாதம் பகிர்ந்திருக்கிறோம் அதை நமது நண்பர்கள் அனைவரும் அறிவார்கள் ,நண்பர் சிங்கராஜ் அவர்கள் நமக்கு 24/04/2013 அன்று கூரியர் மூலம் அனுப்பப்பட்டு  சிறிது தாமதமாக கிடைக்கப்பெற்று ஜூன் மாதம் ஸ்கேன் செய்யப்பட்டு நமது முக நூல் குழுமமான " முத்தரையர் இணைய நண்பர்கள் குழுமத்தில் " கையெழுத்து பிரதியாகவே பதிவிடப்பட்டது .அவர் தொலைபேசி எண்களுடன் ,அதை மற்றவர்கள் பயன்படுத்தி போட்டுள்ளார்கள் ,ஆக ஆனால் நம் மூலம் வெளி வந்தது என்பதை தெரிய படுத்துவதில் கவுரவ குறைச்சல் ,ஆனால் அவர்களின் பதிவு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்து பதிவு போடுபவர்கள் அவர்கள் மட்டும் அதையே செய்வார்கள் !ஆனால் எல்லோருக்கும் நம் குழுமம் தான் முன்னோடி !  
மறைக்கப்பட்ட முத்தரையர் சரித்திரம்  -அளிக்கப்பட சரித்திரம்

வாழ்க சோழ நாட்டு பல்லவ நாட்டு முத்தரையர்கள் 

சோழர்களே முத்தரையர்கள் - முத்தரையர்களே  சோழர்கள்
 
சோழர்கள் -முத்தரையர்கள் -பாண்டியர்கள் -பல்லவர்கள் நான்கு அரசர்களும் 

நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்களேஎன்பது தான் உண்மை அதுதான் வரலாற்று சரித்திரம் .

தமிழக வரலாற்றில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட போர்களை சந்தித்தவர்கள் முத்தரையர்கள் என்ற சோழநாட்டு வீர மூப்பர்களே !

மூப்பர் என்றால் மன்னர்களின் சேனைத்தளைவர்கள் என்று அர்த்தம் .

மூப்பனார் என்றால் கந்தன் முருகனின் சேனைத்தலைவர்கள் என்று அர்த்தம் 

பதிமூன்று தலைமுறைகளாக அரசர்களாகவும் 

சோழ வம்சம் - தஞ்சாவூர் .
பாண்டிய வம்சம் - மதுரை 
பல்லவ வம்சம்  - காஞ்சிபுரம் 
நாயக்க வம்சம் - விஜய நகர பேரரசு 
எல்லாளன் வம்சம் -ஈழ நாடு (இலங்கை )
ஆற்காட்டு நாவாப் தமிழ் நாட்டின் இருபத்தி ஏழு பாளையங்களை அடங்கியது அதற்க்கு மன்னராக இருந்தவர் மாமன்னர் ஆற்ககாட்டு நவாப் .

கான் சாஹிப் பிரிடிஷ்க்காரர்களின் தமிழ் நாட்டின் தலைமை தளபதியாக இருந்தவர் .
ஜாக்சன் துரை -பிரிட்டிஷ் தளபதி -வீரபாண்டிய கட்டபொம்மனை எதிர்த்து போரிட்டவர் .
வெல்ஷன் துரை -மருதுப்பாண்டியரை எதிர்த்து போரிட்டவர் .
சிவகங்கை சீமையை ஆண்ட மறவர் நாட்டு மாமன்னன் உடை யனத்தேவர் .
இத்தனை அரசர்களுக்கும் தளபதிகளுக்கும் சோழ நாட்டு வீர சோழ மூப்பர்கள் (முத்தரையர்கள் ) அமைச்சர்களாகவும் போர்ப்படை தளபதிகளாகவும் அரசில் சதுரங்க வாதிகளாகவும் சிப்பாய்களாகவும் இருந்தார்கள் என்பது தான் சரித்திரம் அதுதான் உண்மை ,அதுதான் வரலாறு .

பதினோராம் நூற்றாண்டில் சோழர்குல மாமன்னர் ராஜேந்திர சோழன் இலங்கை ,அந்தமான் ,இந்தோனேசிய ,மலேசியா,கம்போடியா ,போன்ற நாடுகளின் மீது படை எடுத்தபோது அப்போரில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் "முத்தரையர்கள் என்ற சோழநாட்டு மூப்பர்களே என்பதுதான் சரித்திரம் அதுதான் வரலாறு .

1267 ஆம் நூற்றாண்டில் மராட்டியர்களின் படை எடுப்பாலும் முஸ்லிம்களின் படையெடுப்பாலும் சோழ சாம்ராஜ்யம் சிதறிப்போன சோழர்கள் பாதிப்பேர் கொல்லப்பட்டும் பாதிப்பேர் அடிமைகளாகவும் மீதிப்பேர் குறுநில மன்னர்களகளுக்கு அமைச்சார்களகாவும்  ,தளபதிகளாகவும் சிப்பாய்களாகவும் வேட்டைக்காரகளாகவும் ,மீனவர்களாகவும் வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை அதுதான் வரலாறு ,சரித்திரம் .

ஒரு சோழ நாட்டு வீர  சோழ மூப்பர் சமுதாயத்தை சேர்ந்தவன் போர்க்களத்தில்  ஒரு யானை அடக்கும் பலம் கொண்டவர்களாக இருந்தார்கள் ,வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை அதுதான் வரலாறு ,சரித்திரம் .
பிறவியிலேயே முரட்டு குணம் ,போர்குணம் உடையவர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை .
மதுரைக்கு கிழக்கு ,மேற்கு தெற்காக வாழும் சோழ நாட்டு பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்களின்  வீர வரலாற்றை 1765 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டின் தமிழ் நாடு என்பது 27 பாளையங்களாக இருந்தது 27 பாளயங்களுக்கு தலைமை அரசராக இருந்தவர் ஆர்க்காட்டு நவாப் .இவர் வெள்ளைக்காரரிடம் வாங்கிய கடனை திருப்பிதரமுடியாத ஆர்க்காட்டு நவாப் தன் கட்டுபாட்டில் இருந்த 27 பாளையகாரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை வெள்ளைக்காரர்களிடம் அளித்தார் .ஆற்காட்டு நவாப்பின் போர்ப்படையில் தலைமை தளபதியாக இருந்தவர் ,கான்சாஹிப் கான் அவரின் துணை தளபதிகளாக இருந்தவர்கள் ஆர்க்காட்டு நவாப்பின் தளபதி கான் சாஹிப்பின் கையினால் சோழநாட்டு வீர சோழ மூப்பர்கள் என்ற பட்டமும் பட்டயமும் பெற்ற முத்தழகு மூப்பர்  என்ற சோழநாட்டு வீர சோழ மூப்பர். ஆதியன் மூப்பர் என்ற சோழநாட்டு மூப்பர் வீரண்ணன் மூப்பர் என்ற சோழநாட்டு வீரசோழ மூப்பர் இவர்கள் தலைமையில் கான் சாஹிப்பின் தலைமையிலும் சோழ,பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்கள் 17 ஆயிரம் போர்  வீரர்கள் 30,000முஸ்லிம் போர்வீரர்களும் இருந்தார்கள் என்பது வரலாறு ,சரித்திரம் .இத்தனை தளபதிகளையும் போர்ப்படை சிப்பாய்களையும்  ,வரிவசுலிக்கும் உரிமைகளையும் ஆற்காட்டு நாவாப் வெள்ளை காரர்களுக்கு உரிமையாக்கினார் .
கான்சாஹிப்பின் துணை தளபதிகள் முத்தழகு சோழநாட்டு வீரசோழ மூப்பர் ,ஆதியன் சோழ நாட்டு வீர சோழ மூப்பர் ,வீரண்ணன் சோழநாட்டு வீர சோழ மூப்பர் இவர்கள் மூன்றுபேரும் கலரி சண்டை கற்றவர்கள் ,பொதி தர்மனுக்கு இணையானவர்கள் .கான் சாஹிப் பிரிட்டிஷ் தளபதிகள் ஜாக்சன் துரை வெல்ஷ் துரை ,மூப்பர் சமுதாய மக்கள் கூட்டாக நடத்திய போரில் வென்ற மணர்கள் ,
நெல்கட்டும் சேவல் பாளையக்காரர் மன்னர் பூளித்த்தேவர் தளபதி ஒண்டிவீரன் இவர்களை வென்ற தளபதி கான் சாஹிப் வெள்ளைகார்கள் கூட்டு போர்ப்படையில் இருந்தவர்கள் .
பிரிடிஷ்க்கார்கள் 2500 போர்வீரர்கள் கான்சாஹிப்பின் முஸ்லிம்கள் ஏழாயிரம் போர்வீரர்கள் சோழநாட்டு வீர சோழ மூப்பர்கள் மூவாயிரம் பேர் .

பாஞ்சாலங்குறிச்சி பாளயக்கார்கள்  ,மன்னர்கள் வீரப்பாண்டிய கட்டபொம்மன் ,ஊமைத்துரை தளபதிகள் வெள்ளைய தேவன் ,சுந்தரலிங்கம் ,மந்திரி தானாபதி பிள்ளை ,இவர்களை வென்ற போரில் கான்சாஹிப் பிரிட்டிஷ் தளபதி ஜாக்சன்துரை இவர்கள் கூட்டுப்படையில் இருந்த இருந்த சமுதாய மக்களின் விவரம் .பிரிடிஷ்க்காரகள் நான்கைரம் போர்வீரர்கள் ,தளபதி கான் சாஹிப்பின் முஸ்லிம் மக்கள் எட்டாயிரம் போர் வீரர்கள் சோழ,பல்லவ நாட்டு வீர சோழ மூப்பர்கள்  ஐந்தாயிரம் போர் வீரர்கள் .

மரவர்நாடு (சிவகங்கை சீமை ) ஆண்ட வீர மராத்தி ராணி வேலு நாச்சியார் தளபதிகள் சின்ன மருது பாண்டியர் பெரிய மருது பாண்டியர் தளபதி கான் சாஹிப் பிரிட்டிஷ் கூட்டுப்போர் படையில் இருந்த போர் வீரர்கள் வெள்ளைக்கார்ரர்கள் மூவாயிரம் ,முஸ்லிம்கள் ஆறாயிரம் சோழநாட்டு வீரசோழ மூப்பர்கள் இரண்டாயிரம் போர் வீரர்கள் .

எட்டையபுரம் பாளையக்காரர் ஜெகவீரப்பாண்டிய நாயக தளபதி அழகு முத்துக்கோன் கான் சாஹிப்பின் பிரிட்டிஷ் கூட்டுப்போர்படையில் இருந்த வீரர்கள் பிரிடிஷார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் ஐந்தாயிரம் ,வீரசோழ மூப்பர்கள் முவைருத்து ஐநூறு  போர் வீரர்கள் .

விருப்பாச்சி பாளையக்காரர் ,மன்னர் கோபால நாயக்கர் இவரை எதிர்த்து கான்சாஹிப்பின் பிரிட்டிஷ் கூட்டுப்படையில் போர்வீரர்களின் எண்ணிக்கை
பிரிடிஷார் மூவாயிரம் ,முஸ்லிகள் ஏழாயிரம் பேர் சோழவீரமூப்ப்ர்கள் நான்கு ஆயிரம் .

மூவாயிரம் ஆண்டுகளாக மறவர் நாடு என்று அழைக்கப்பட்ட சிவகங்கை சீமை வீரமறத்தி வேலுநாச்சியார் மறைவுக்குப்பின் தனது வளர்ப்பு மகன் உடையனதேவர்க்கு வேண்டி ராஜ் பட்டத்தை மருது சகோதரர்கள் பெற்றதால் ராஜா பட்டத்தை மீட்க சிவகங்கை உடையன தேவர் பிரிட்டிஷாருடன் இனைந்து மருது பாண்டியர்களை எதிர்த்து போரிட்ட கூட்டுப்போரில் பிரிடிஷார் நான்கு ஆயிரம் ,முஸ்லிம்கள் ஆராயிரத்து ஐநூறு   ,சோழ வீர மூப்பர்கள் பனிரெண்டு ஆயிரம் போர் வீரர்கள் இருந்தனர் .

கான்சாஹிப்பின் பிரிட்டிஷ் தளபதிகள்- ஜாக்சன் துரை வெல்ஷ் துரை இவர்களின் கூட்டுப்படை தளங்கள் அமைத்த சிவகங்கை மாவட்டம் ,சோழங்குருணை ,ஆனையூர் மதுரை ,சோழவந்தான் நாகலாபுரம் புதூர் ,பாஞ்சாலங்குறிச்சி (தூத்துக்குடி மாவட்டம் )பாளைய நாடு என்கிற ஜமின்பாளயம்பட்டி இன்றும் சோழ நாட்டு மூப்பர் பட்டதுடன் வாழ்ந்து வருகின்றனர் .

தமிழ் நாடு என்பது 27 பாலயன்களாக பிரித்து ஆண்டார்கள் என்பது வரலாறு .1750 ஆம் ஆண்டு முதல் 1850வரை ஒன்னரைக்கோடி தமிழ் மக்களை வெறும் இருபது ஆயிரம் வெள்ளையர் ஆண்டனர் என்பது உண்மை .அதேப்போல் எல்லப்போர்களிலும் வெள்ளையர்கள் குறைவாகவே இருந்தனர் ஆர்க்காட்டு நாவப் தலைமை தளபதி கான்சாஹிப்பின் முஸ்லிம்கள் ,முத்தழகு சோழ வீர மூப்பர்கள் வீரண்ணன் வீர சோழ மூப்பர்கள் ஆதியன் ழோழ வீர மூப்பர்கள் இவர்களின் தலைமையிலான போர்ப்படை வென்றது .தளபதி கான் சாஹிப் என்பவன் பச்சை தமிழன் ,உண்மையான பெயர் மருத நாயகம் என்பது யாருக்கும் தெரியாது .போர்க்களத்தில் அண்ணன் தம்பி சொந்தம் பந்தம் ,உல்,வெளிநாட்டவர் என்ற பாகுபாடு இன்றி போரிட்டனர் .ஒவ்வொருமன்னருக்கும் பின் ஒரு சாதி இருந்தது .எல்லா மன்னர்களும் தோற்றார்கள் வென்றார்கள் .இந்த வரலாற்றின் மூலம் சோழ வீர மூப்பர்கள் முத்தரைய மன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் பல மன்னர்களும் பேர் அரசர்களும் அமைச்சர்களாகவும் அரசியல் சதுரங்க வாதிகளாகவும் போர்ப்படை தளபதிகளாகவும் சிப்பாய்களாகவும் வாழ்ந்தார்கள் .