புதன், 30 ஜூலை, 2014

காமன் வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவுகளில் வேலூர் சத்துவாசாரியை சார்ந்த திரு ,சதீஷ் குமார் அவர்களுக்கு தமிழக அரசு ஐம்பது லட்சம் வழங்கி ஊக்கபடுதியுருக்கிறது நன்றிகளும் பரிமாற பட்டிருக்கிறது ஆனால் அதே சமயம் ஸ்பெயின் குடியுரிமை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் அவர்களுக்கு மூன்று கோடி ருபாய் பரிசளித்தது போல் தமிழகத்தை சார்ந்த வசதி குறைவான குடும்பத்தை சார்ந்தவருக்கு அதில் மூன்றில் ஒரு பங்காவது ஒரு கோடி ரூபாயாவது அறிவிக்கும் தமிழக அரசு என்கிற எதிர் பார்ப்பு இருந்தது ,அதை தான் பெரும்பாலான நண்பர்கள் கேட்கிறார்கள் ?அளவுக்கோல் ஆளுஆளுக்கு வேறு படுமா ?இல்லையெனில் இவருக்கும் அதை கிடைக்க செய்திருக்கலாமே அரசு !தமிழக தமிழனுக்கு இன்னும் செய்யுமா தமிழக அரசு !
திரு ,சதீஷ் சிவலிங்கம் அவர்களின் காமன் வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் தங்க பதக்கம்  பெற்று சாதித்து காட்டியுருகிறார் அதற்க்கு தமிழக அரசு ஐம்பது இலட்ச ருபாய் ஊக்கத்தொகையாக அறிவித்திருக்கிறது ,நன்றி தெரிவித்து கொள்கிறோம் ,ஆனால் செஸ் போட்டியில் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தற்போது ஸ்பெயின் குடியுரிமை பெற்று இருப்பவருக்கு கோடிகளை அறிவித்தது ஆகையால் நமக்கும் அந்த எதிர் பார்ப்பு இருந்தது !பரவ இல்லை இந்த லட்சங்கள் லட்சியத்தை அடைந்தற்க்கு அங்கீகாரமாக எடுத்து கொள்வோம் .நன்றிகளுடன் .
நண்பர்கள் நிறைய பேர் என்னிடம் ஏன் ப்ளாகை மறந்து விட்டீர்கள் என்பது மறக்க வில்லை நேரமின்மை மற்றும் மற்ற சமுக தளங்களில் எழுதுவதற்கே முடியவில்லை ஆகாயல்தான் மற்றபடி வேறு எதுவமில்லை ,நிற்க ,மிகந்த மகிழ்ச்சி அளிக்க கூடிய நிகழ்வு அது "தங்கம் "பதக்கம் வென்றிருக்கும் நம் முத்தரைய சிங்க இளைஞன் திரு ,சதீஷ் சிவலிங்கம் ,வேலூர் சத்துவாச்சாரியை சார்ந்த சாதனை படைத்த அவரை வாழ்த்த வார்த்தைகள் இன்றி தேட வேண்டியுருக்கிறது நெஞ்சமெல்லாம் குதுகலம் ,ஆனந்த கண்ணீர் இனிய வாழ்த்துக்கள் ,அவருக்கு சமர்பிக்கலாம் என்னோடு சேர்ந்து நீங்களும் தான் ,

சாதனை எடையை தூக்கி தற்போதய சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி காட்டியுருக்கிறார் ,அவரின் கடுமையான நான்கு வருட முயற்சி அவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தேசம் ,அனைத்து உலக தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்றால் அது மிகை இல்லை ,இது இது தான் இது போன்ற சாதனைகள் மட்டுமே நம் இணத்திருக்கும் நம் இளைஞர்களுக்கும் ஊக்குவிக்கும் எல்லோரையும் இது போல் சாதிக்க வைக்க தூண்டு கோலாக இருக்கும் ,இனியேனும் நம் இளைஞர்கள் வெறும் உணர்ச்சி குவியலாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல் படவேண்டும் ,அது அவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி ,நம் இனத்திருக்கும்  பெருமை தேடி தரும் .

இத்தகைய சாதனை புரிய பின்பலமாக இருந்த அவர்களின் பெற்றோர்க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம் !