திங்கள், 25 நவம்பர், 2013


http://www.youtube.com/watch?v=xNRhYydV1A8


ஹைதராபாத் உலக மீனவர் தின கூட்டத்தில் மரியாதைக்குரிய திருமிகு ,கு.பா ,கிருஷ்ணன் அவர்களுடன் .




அக்டோபர் ஐந்தாம் தேதி நம் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபோது !

சனி, 16 நவம்பர், 2013

http://velai.net/2013/11/textron-hiring-software-enghttp://velai.net/2013/11/textron-hiring-software-engineer-in-bangalore/ineer-in-bangalore/
பெங்களுரை சார்ந்த textron நிறுவனம் மென் பொருள் பொறியாளார் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன ,ஆரவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் ,மேலும் விபரங்களுக்கு முத்தரையர் இனையம் நண்பர்கள் குழுமம் ,mutharaiyar's on internet group பதிவுகளையும் பார்க்கலாம் .

புதன், 13 நவம்பர், 2013

கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைக்கும் நம மக்கள் உழைப்பின் ஊதியத்தை பத்திரமாக காப்பற்றி கொள்வது அவசியம் வசீகர பேச்சு ,கவர்சிகரமான திட்டங்கள் என நம்பி மோசம் போவதை நம் இளைஞர்கள் எடுத்துரைத்து தடுக்க முயலுங்கள் ,நாம் எவ்வளவோ ,தொலைகாட்சி ,செய்தித்தாள் என அடிக்கடி மோசடி பேர்வழிகளையும் ,ஏமாற்றும் முறைகளை அறிந்திருந்தும் மீண்டும் மீண்டும் நம் கூடுதலாக சில கிடைக்கின்றன என்பதால் மொத்தத்தையும் கொட்டை விட்டு ஏங்குவது ,அழுது புலம்பவதில் ஒரு காரியமும் நடக்க போவதில்லை என்பதுதான் உண்மை ஆனால் நடைமுரையை புரிந்து கொள்வதில் சிக்கலால் படும் இன்னல்கள் அதிகம் ஆதலால் முன் யோசனையோடு நடந்துகொள்ள நம் இளைஞர்கள் வழிக்காட்ட வேண்டும் இதற்க்கு நாம் சில வசுவுகளை கூட கேக்க வேண்டியுருக்கும் பொறுமையாக எடுத்துரைக்க வேண்டும் ,அப்படித்தான் நம் நபர்கள் சிலர் எச்சரித்த போது உங்களக்கு பொறாமை என்று என்று பொங்கிவிட்டு லட்ச்ச கணக்கில் பணத்தையும் இழந்து விட்டு அடியாட்கள் மிரட்டல் ,உருட்டல்களால் பாதிக்கப்பட்டுருக்கிரார்கள்" பைன் பியுச்சர் "பைன் ,பைன் என்று நான்கு பேர்களில் ஒரு பினான்ஸ் கம்பனி ஏமாற்றி இருக்கிறது அதில் லட்ச்ச கணக்கில் ஏமாந்தது நம் இன மக்கள் என்பது மிகவும் வேதனைக்குரியது ,மேலும் சிலர் முகவர்களாக முன்னின்று வசூல் செய்து கொடுத்தும் மாட்டிக்கொண்டிருக்கிரார்கள் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை போல் மற்ற மாவட்ட மக்களும் ஏமாறாமல் பார்த்து கொல்லுங்கள் ,குறிப்பாக நாமக்கல் முதல் கோவை வரை உள்ளவர்கள் ,இந்த மோசடி கும்பல் பொங்கல் சமயத்தில் மாநிலம் முழுவதும் கடை விரிக்கும் ஆகவே இப்போதே உற்றார் உறவினர் நண்பர்கள் என்று அனைவரிடமும் சொல்லி வைத்து விடுங்கள் போனால் வராது காரணம் மேல் மட்டம் முதல் கிழே வரை உள்ளவர்கள் சேர்ந்து நடத்துவது தான் இந்த பித்தலாட்டம் .

ஞாயிறு, 10 நவம்பர், 2013

புதுடெல்லி,: பேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் போன்ற ஆன்லைன் சமாச்சாரங்களில் நீங்கள் வலம் வந்தால், கொஞ்சம் உஷாராக இருங்க. மத்திய அரசின் கழுகு கண்காணிப்பு அதிகரித்தபடி உள்ளது. அரசுக்கு, நாட்டுக்கு எதிராக, அவதூறு கிளப்பும் வில்லங்க கணக்குகளை நீக்க மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஆரம்பித்துள்ளன.  பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பதிவு செய்து கணக்கை ஆரம்பிக்கலாம்.

 நண்பர்கள், உறவினர்களுடன் படங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதை தாண்டி, இப்போது ட்விட்டரை போல பொதுவான கருத்துக்கள் பேஸ்புக்கில் வலம் வருகின்றன.  அடையாளம் தெரியாத நபர்கள் பலரும் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலை இருப்பதாக பலரும் எண்ணினாலும், உண்மையில் சைபர் கிரைம் போலீசில் இருந்து மத்திய அரசின் உளவுத்துறை அமைப்புகள் வரை கண்காணித்தபடி உள்ளன. நாட்டுக்கு எதிராக, சமூகத்துக்கு எதிராக, வன்முறையை தூண்டுவதாக அமையும் விமர்சனங்களை அரசு ஏஜன்சிகள் கண்காணிக்கின்றன. அதுபோல, தனிப்பட்ட விமர்சனங்கள் கூட கண்காணிக்கப்படுகின்றன. 

அதனால் தான் சிலர் லைக் போட்டாலும் கூட சிக்கிக்கொள்கின்றனர். எப்போதாவது இப்படி சர்ச்சை கிளம்பி, சிலர் லைக் போட்டதற்காக கைதாவது, வழக்கை சந்திப்பது என்பது நடந்து தான் வருகிறது. இதன் பின்னணியில் அரசின் புலனாய்வு ஏஜன்சிகள் உள்ளன.  பல நாடுகளும் இப்படி கண்காணிப்பை செய்தாலும், இந்த விஷயத்தில் இந்தியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது, அதிக கண்காணிப்புள்ள நாடு என்ற பெயர் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

 
  இந்த அறிக்கைகளில் இருந்து கிடைத்த சில முக்கிய தகவல்கள்: 
* பேஸ்புக்கில் உள்ள அக்கவுன்ட்கள் தொடர்பாக 3200 வேண்டுகோள்கள் , இந்திய  அரசிடம் இருந்து வந்துள்ளது. அதில் 50 சதவீதத்துக்கு மேல்     பதில் அனுப்பப்பட்டுள்ளது. 
* பேஸ்புக்கில் எந்த ஒரு கணக்கையும் அரசு தடை செய்ய  சொல்லவில்லை. மாறாக, கண்காணிப்பை அதிகரித்துள்ளது. 
* மைக்ரோசாப்ட் அக்கவுன்ட்களில் 413 கணக்குகள் யாருடையது என்பதில் இருந்து தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. 
* இதுபோல, ஸ்கைப் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் 102 பேர் பற்றிய தகவல்களை கேட்டு பெற்றுள்ளது. 
* ஆப்பிள் நிறுவனம், மத்திய அரசு கேட்டதில்,   41 சதவீத தகவல்களை கடந்த ஆறு மாதத்தில் அனுப்பியுள்ளது. 
* மொத்தம் 41 நாடுகள் இப்படி தகவல்களை கேட்டு பெற்று வருகின்றன. அவற்றில் முதலில் உள்ளது அமெரிக்கா;  இரண்டாவது இந்தியா. 
* அமெரிக்கா 8605 பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்கள் பற்றி தகவல் கேட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து கண்காணிக்கிறது. 
* இந்தியாவை பொறுத்தவரை, மத்திய கண்காணிப்பு மையத்தை ஆரம்பிக்க உள்ளது. அது முழு அளவில் இயங்க ஆரம்பித்தால், பேஸ்புக், ட்விட்டர்   அக்கவுன்ட்களை தன்னிச்சையாக கண்காணிக்கலாம். 
* பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இருந்து தகவல்களை பெற மட்டும் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். சுயமாக கண்காணிக்க அரசுக்கு இந்த   நிறுவனங்கள் அனுமதி தரவில்லை.
* கடந்த சில மாதங்களில் 60 ட்விட்டர் கணக்குகளை ரத்து செய்ய மத்திய, மாநில  அரசுகள் கேட்டுள்ளன.

திங்கள், 4 நவம்பர், 2013

இது ஒரு அறிய வாய்ப்பு நம் இனத்திருக்கு ,நமது நீண்ட நாள் கோரிக்கையான இருபத்தி ஒன்பது பிரிவுகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைப்பது ,உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 15% தனி ஓதிகிடு ,மற்றும் நமக்கு வாய்ப்புள்ள பெரம்பலூர் ,திருச்சி ,சிவகங்கை ,விருதுநகர், தஞ்சை ,திண்டுக்கல் ,வேலூர் நாடாள மன்ற தொகுதிகளில் நம் இனத்தின் வேட்ப்பாளர்களை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் ,சென்னையில் மணிமண்டபம் ,மதுரை ,புதுக்கோட்டை ,வேலூர் போன்ற நகரங்களில் மன்னர் சிலை நிறுவ வேண்டும் இந்த கோரிக்கைகள் வென்றுஎடுக்க இதுதான் சரியான சமயம் ,யுணர்ந்து செயல்படுவது அவசியம் !
சில அமைச்சர்களின் புகைப்படங்கள் குறிப்பாக ,நம் இனத்தின் முதல் ,அமைச்சரான திரு ,கோவேந்தன் , அதிமுக                                                                     திரு ,துரை ,சந்திரசேகரன் திமுக (மதிமுக சென்றார் ) ,                                                           திரு,புலவர் ,செங்குட்டுவன் திமுக ,தற்போது (அதிமுக )
திரு ,அண்ணாவி அதிமுக
திரு ,கே ,கே பாலசுப்ரமணியன் அதிமுக
போன்றோரின் புகைப்படங்கள்  சேகரித்து வருகிறோம் அடுத்த பதிவில் மீதி அமைச்சர்கள் !
தற்போதைய அமைச்சர் -திரு ,டி,பி ,பூனாட்சி ,மணச்சநல்லூர் தொகுதி ,திருச்சி .
திரு ,என் ஆர் ,சிவபதி ,அதிமுக (இருமுறை  அமைச்சர் ) 2012.முசுறி தொகுதி ,திருச்சி மாவட்டம் .பள்ளிகல்வி ,தொல்வியல்,இளைஞர் மேம்பாடு ,விளையாட்டு துறை சிறைத்துறை ,நீதி நிர்வாகம் ,சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அமைச்சர் .

திரு ,பரஞ்சோதி  அதிமுக, திருச்சி மேற்கு தொகுதி -06/11/2011-08/11/2011.          
முன்னாள் அமைச்சர் ,இந்து அறநிலையம்,பள்ளிகல்வி ,இளைஞர் மேம்பட்டு துறை மற்றும் சட்டம் -நீதித்துறை .
திரு ,ஆலங்குடி, வெங்கடாசலம்,அதிமுக ,புதுக்கோட்டை மாவட்டம் . முன்னாள்  சுற்றுலா துறை அமைச்சர் 2001-2006 .
திரு ,கு .ப ,கிருஷ்ணன் ,அதிமுக முன்னாள் விவசாய துறை அமைச்சர் 1991-96.ஸ்ரீ ரங்கம் தொகுதி திருச்சி மாவட்டம் .
முத்தரையர் இன அமைச்சர்கள் ஒரு பார்வை ;-

திரு ,என் ,செல்வராஜ் B.E, திமுக .-முன்னாள் வனத்துறை அமைச்சர் -2006-2011.மணச்சநல்லூர் தொகுதி ,திருச்சி .மாவட்டம்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

தமிழ் நாடு முத்தரையர் சங்க தலைவர் திரு ,குழ ,செல்லையா அவர்கள் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய போது இருந்த ஆறு  உறுப்பினர்களில் ஒருவர் ,ஆக அதிமுக நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் அதேப்போல் அதிமுக ஆரம்பிக்கப்பட்டபோது பேராயுரணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த குழ ,செல்லையா அவர்கள் தான் அதிமுகவில் சேர்ந்த முதல் அதிமுக உறுப்பினர் ,

அதிமுக நிறுவன உறுப்பினரான குழ ,செல்லையா நியாயமாக மாநில பொறுப்பில் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவருக்கு தஞ்சை மாவட்ட செயலாளார் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்பது அதிமுகவின் வரலாறு "முத்தரையர் "கள் எப்போதுமே களபணியாலார்களாகவே இருக்க மட்டுமே லாயக்கு என்று அப்போதே முடிவெடுத்துவிட்டார்கள் அன்றில் இருந்து இன்று வரை இதுதான் நிலைமை ,இத்தனைக்கும் புதுக்கோட்டையில் 12/08/1979 ,அன்று நடந்த முதல் "முத்தரையர் " மாநில மாநாட்டில் எம்ஜியார் கலந்துக் கொண்டார் முத்தரையர் உட்பிரிவுகளை ஒரிங்கினைத்து சாதி ஒழிப்பு மாநாடு என்று சொலப்பட்ட மாநாடு எம்ஜியார் முன் மிகவும் பிற்படுத்தப்பாடவர்களுக்கு 9000ருபாய் உச்ச வரம்பாக கொண்டு வந்து தீர்மானாமாக நிறைவேற்றப்பட்ட மாநாடு ,இதை எல்லாம் செய்தவருக்கு அதிமுக ஆட்சி வந்தவுடன் நியாயமாக அவருக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் வழங்கப்படவில்லை ,எம்ஜியார் காலத்தில் கோவேந்தனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது ,ஆனால் மற்ற இனத்திருக்கு எத்தனை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்று பார்த்தால் தெரியும் நம் இனத்தின் நிலைமை அடித்து கூறுகிறேன் நம் இனம் அதிமுகவிற்கு வாக்களித்தது போல் எந்த இனமும் வாக்கு அளித்தது இல்லை ஆனால் மற்ற இனத்தை விட குறைவாக பலன் அடைந்த இனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றால் அதுவும் முத்தரையர் இனம் தான் .

முத்தரையர் இனத்தின் இருபத்தி ஒன்பது உட்பிரிவுகளை இணைத்து அரசானை பிற்பித்தது,திருச்சி மாவட்டத்துக்கு மன்னர் பெயரை சூட்டியது தவிர வேறு எதுவும் உருப்படியாக செய்தார்கள் என்று சொல்ல முடியவில்லை ,இன்னும் சொல்ல போனால் அதிமுக ஆட்சி காலம் முழுவதும் நம் இனத்தவர்கள் அமைச்ச்கர்களாக இருந்தார்களா என்பதே கேள்விகுறி ? அல்ல உண்மை !
ஆனால் எனக்கு தெரிந்து வெறும் பதினைந்து சதவீதம் வாக்குகள் மட்டுமே பெரும் திமுக ஆட்சி காலம் முழுவதும் அமைச்சர்கள் இருந்து இருக்கிறார்கள் ,திரு ,துரை ,சந்திர சேகரன் ,புலவர் செங்குட்டுவன் ,திரு என்,செல்வராஜ் என இவர்கள் அனைவரும் ஐந்தாண்டுகள் அமைச்சர்களாக இருந்தவர்கள் தான் ,இருவர் தமிழ்நாடு தேர்வாணைய குழு உறுப்பினர்களாகவும் இருந்தனர் ,வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சிற்றரசு மாளிகை பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது ,சென்ற திமுக ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரையர்களை மிகவும் பிற்படத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது என பலவற்றை செய்திருக்கிறது .
விஷயத்துக்கு வருவோம் இப்போது முத்தரையர் சங்கம் வேண்டுகிறது அம்மா ,திரு ,குழ ,செல்லையா அவர்களுக்கு ஒரு ஒரு நல்ல பொறுப்பு வழங்குங்கள் என்று கெஞ்சும் நிலைமை தான் இன்று அவருக்கு ,யாருக்கு அதிமுகவின் நிறுவன அருவர்களில் ஒருவரான அவருக்கே இதுதான் நிலைமை !
மறந்துடாதிங்க நடப்பது நமது ஆட்சி !ஒரு பொறுப்புக்கு கெஞ்சிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து விடக்கூடாது !இருப்பது ஒரு மந்திரி அவரும் எப்போ மாற்றப்படுவார் என்று தெரியாது என்பது வேறு விஷயம் ,ஆனால் தமிழகத்தின் இன்றைய மக்கள் தொகையில் ஏறக்கொறைய இரண்டு கோடியே நாற்ப்பது லட்சம் பேர் சார்ந்தது முத்தரையர் இனம் நமக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்கிறதா ? கொஞ்சம் யோசித்து பாருங்கள் குறிப்பாக இளைஞர்கள் ,இனியேனும் முழித்துகொள்வோம் ,கட்சி என்பதை நாம் இனி எந்த கட்சி நம் இனத்திருக்கு வாய்ப்புகள் தருகின்றனவோ அவர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம் இல்லயேல் எந்த கட்சியானாலும் புறகணிப்போம் ,அதற்காக கறிவேப்பிலையாக நம்மை பயன்படுத்தி கொள்ள ஒரு சில அமைப்புகள் ,"கட்சி " செயல் படுகிறது அந்த கட்சியால் நமக்கு ஒரு பயனும் இருக்கப்போவதில்லை ஜெயத்தப்பின்னர் நம்மை மனிதர்களாக கூட மதிக்க மாட்டார்கள் அவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் அவர்கள் வளர்வதருக்கு நாம் காரணியாக இருக்கபோகிறோம் அவ்வளவுதான் !அப்படிப்பட்ட கட்சிகள் பின்னாடி செல்வதருக்கு பதில் நம் இனம் தனித்தே போட்டியுட வேண்டும் பலப்டுத்திக்கொள்ள வேண்டும் அதுதான் நமக்கு பிற்காலத்தில் பலன் அளிக்கும் !சிந்திப்போம் !வளம் பெறுவோம் ".

   

வெள்ளி, 1 நவம்பர், 2013

அனைவருக்கும் இதயம் கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள் !
"தேசம் அண்டே மட்டி காது மனுஷுலே " என்று மக்கள் போராளி என்று ஆந்திராவில் அழைக்கப்பட்ட அல்லுரி சீத்தா ராமராஜு முழங்கிய முழக்கம் ஒட்டு மொத்த ஆந்திர மாநிலம் முழக்க ஒன்றிணைத்த முழக்கம் ,அது "தேசம் என்றால் வெறும் மண் இல்லை ,மக்களே " என்பது அதன் அர்த்தம் அது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள் என்பதை கோர சண்டாளன் மக்க போகும் ராஜபக்ஷேவின் செய்கைகள் உணர்த்துகிறது அவனை பொறுத்தவரை "ஈழம்"என்பது வெறும் மண் மனிதர்கள் அல்ல என்பதை" இசை ப்ரியாவின் " கொடுமையான மரணம் மூலம் நிருபித்து இருக்கிறான் ,ராஜீவ் காந்தி மரணம் என்பது கொடுமையானது என்பது மனிதர்கள் யாரும் மறுக்கவில்லை அதற்காக ஒட்டு மொத்த ஈழ தமிழர்களையும் அழிப்பதற்கு துணை போகும் இந்தியாவின் அதிகார வர்கத்திருக்கு என்னை அரித்து கொண்டே இருக்கும் ஒரே கேள்வி இந்தியாவை உலக அளவில் கொண்டு சென்ற "அன்னை இந்திரா காந்தியை "அவரின் வீட்டில் வைத்தே கொன்ற சீக்கிய மக்கள் அனைவரையும் இப்படியா கொன்று குவித்தது இந்தியா ,அந்த இனத்தை சார்ந்த இன்றைக்கு இலங்கை செல்வேன் என்று அடம்பிடிக்கிற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமராக வித்து அழகு தானே பார்த்து கொண்டிருக்கிறோம் அதையாவது சிந்தித்து பார்த்து அந்த டர்பன் வீரர் முடிவெடுத்து இருக்கவேண்டியவர் இப்படி திருவிழாவிருக்கு செல்ல அடம்பிடிக்கும் குழந்தை போல் முடிவெடுப்பது வெக்க கேடான விஷயம் மனிதாபிமான அற்ற ஒரு ரோபோ என்றே சொல்ல தோன்றுகிறது !இலங்கையில் காட்டும் வீரத்தை அதிகார வர்க்கம் பஞ்சாபில் காட்ட முயன்றால் அதன் விளைவுகள் எப்படியுருக்கும் என்று தெரியும் ஆனால் தமிழன் என்றால் மாட்டும் பொத்துகிட்டு வருது "உணர்ச்சிகள் ", உணர்ச்சிகள் என்பது எல்லா மனித ராசிகளுக்கும் ரத்தத்தில் கலந்திருப்பது வெடிக்கும்போது சரியான படிப்பினை கற்க போவது நிச்சயம் அதற்க்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு !பஞ்சாபை இங்கே ஒப்பிடுவது அங்க காட்டும் மனதாபிமானம் தமிழனக்கும் காண்பிக்கவேண்டும் என்பதற்காக மட்டும்தானே வேறில்லை !