செவ்வாய், 31 ஜூலை, 2012

களப்பிரர் என்னும் கலி அரசர்

Part 2

களப்பிரர், கன்னடர்கள் என்பதற்கு கூட முடிந்த முடிபான வரலாற்று சான்றுகள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் படு நிச்சயமாக சொல்லலாம் அது அவர்கள் மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள். 325 ஆண்டுகள் தமிழகத்தின் மூவேந்தர்களையும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள். இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது. களப்பிரர் ஆட்சி செய்த 325 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம்.

தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை வலிந்து திணிக்கும் விதமாக புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதிக்கொண்ட பார்ப்பனியம் கி.மு. 1700 – கி.மு. 1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கேடுகாலம் இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது. தமிழகத்திலிருந்த மூவேந்தர்களும் ஏன், எப்படி எதற்கு என்று எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின் ஆடம்பர ஆட்டங்களுக்கும், யாகங்களுக்கும் தங்களின் அறிவை தொலைத்தார்கள். மூவேந்தர்கள் தங்களோடு சேர்த்து தமிழ் சமூகத்தையும் அழிவிற்கு உள்ளாக்கினார்கள். தமிழர்களின் மதம், கலை, கலாச்சாரம், வானியல், சோதிடம், மருத்துவம், மொழி அனைத்தும் வெகு விரைவாக ஆரிய சமஸ்கிரத மயமாக்கப்பட்டன. ரிக் வேத ஆரிய முனிகள் தமிழர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிமை கொண்டாடினார்கள்.

தமிழ் கல்வி பிராமணர்களின் ஏகபோக உரிமையானது. இதற்கு உதாரணம், சங்க இலக்கியங்களுக்கு பிற்காலத்தில் உரை எழுதிய அனைவரும் பிராமணர்களே. திருகுறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரும் பிராமணரே. இதன் விளைவு சங்க இலக்கியங்கள் அனைத்திலும் திருகுறள் உட்பட எல்லாவற்றிலும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை திணிக்கும் வேலைகள் சுதந்திரமாக நடந்தது. இதைதான் ‘ஊரான் வுட்டு நெய்யே எந் பொண்டாட்டி கையே’ என்பார்கள். இதை தட்டி கேட்க வேண்டிய மூவேந்தர்களும் அசுவமேத யாகத்திலும், வாஜபேய யாகத்திலும், புத்திரகாமேஷ்டி யாகத்திலும் மூழ்கி கிடந்தார்கள். தங்களுக்கு எதிரான அனைத்தையும் விழுங்கி செரித்துவிடுவது பார்ப்பனியத்தின் சிறப்புகளுள் ஒன்று. வட இந்தியாவில் சமணமும், பௌத்தமும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டன. இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவில் பரவாததற்கு காரணம் இதுவே.

மூவேந்தர்களும் போட்டி போட்டுகொண்டு வைதீக பார்ப்பனியத்தை ஆதரித்தார்கள். பிராமணர்களுக்கு பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் வழங்கப்பட்டன. உள்ளூர் ஆட்சியதிகாரமும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டது. மனு போன்ற பிராமணியத்தின் பிரத்தயேக தர்மங்கள் பொது மக்களிடையே திணிக்கப்பட்டன. உழைக்காமல் நோன்பு கும்மிடுவதற்கும், உழைப்பவர்ளை ஆதிக்கம் செய்வதற்கும் உண்டான அனைத்து வேலைகளையும் செய்ய பிராமணியம் தவறியது கிடையாது. இங்கே பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் என்றால் என்ன என்று பார்க்கவேண்டி இருக்கிறது.

பிராமணர்களுக்கு என்று ஒரு ஊரை உருவாக்கி, அந்த ஊரில் வசிக்கப் போகும் ஒவ்வொரு பிராமணருக்கம் அந்த ஊரை சுற்றி விவசாய நிலங்களை ஏற்படுத்தி, அந்த நிலங்களில் உழைப்பதற்கு வேலையாட்களையும் கொடுப்பதற்கு பெயர் பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதி மங்களம். இந்த ஊர்களை சதுர்வேதி மங்களங்கள் என்றும் பிரம்மதேயங்கள் என்று அழைப்பார்கள். இந்த ஊர்களில் வசிக்கும் பிராமணர்களிடமிருந்து எந்தவிதமான வரியும் வசுலிக்கப்படாது. இவர்களின் விவசாய நிலங்களுக்கும் வரிகள் கிடையாது.

எந்த தகுதியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் இத்தகைய ஆதிக்க சலுகைகள் என்று அன்றைய தமிழ் சமூகத்திற்கும், அன்றைய மூவேந்தர்களுக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றாத நிலையில்தான் களப்பிர புரட்சியாளர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தார்கள். ஒடுக்கப்பட்ட விவசாய மற்றும் வணிக வர்கத்தின் கூட்டே களப்பிரர்கள். சமூக சீரழிவிற்கு துணைபோன மூவேந்தர்களும் ஆட்சி அதிகாரங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள். இந்த விரட்டியடிப்பு கி.பி. 150 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. கி.பி. 250 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் களப்பிர புரட்சியாளர்களின் முறையான ஆட்சி தொடங்கியது. தமிழகமும் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்தது மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.

பார்ப்பனியத்தின் பக்கமும், பிராமணர்கள் பக்கமும் களப்பிர புரட்சியாளர்களின் பார்வை திரும்பியது. பிரம்மதேயங்களும் சதுர்வேதி மங்களங்களும் பிராமணர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டன. பிராமணர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்த சொத்துகள் அனைத்தும் களப்பிர ஆட்சியாளர்களால் திரும்ப எடுத்தக்கொள்ளபட்டன. பிராமணர்களின் மேலாதிக்கம் அடக்கி ஒடுக்கப்பட்டது. பிராமணர்கள் உழைக்கும் வர்கத்திற்கு அடங்கி இருக்க வேண்டிய நிலையை களப்பிர புரட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் தோன்றிய பேரரசுகளில் பார்ப்பனியத்திற்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுத்த ஒரே ஒரு பேரரசு களப்பிர பேரரசு மட்டுமே. பார்ப்பனியத்தை அடக்கி ஒடுக்கி ஒரத்தில் உட்கார வைத்த காரணத்திற்காகவே இன்று களப்பிரர் ஆட்சி இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது. களப்பிரர் கொள்ளையர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள். 

ஒரு நாகரிகத்தின் இருண்ட காலம் என்று வரையறுக்கப்படுவது எது என்று இந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்தோம். ஆனால் நேர்மையான எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் களப்பிர ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணியக் கூட மாட்டார்கள். அனைவரும் அனைவருக்கும் சமம் என்று போதிக்கின்ற சமண மதமும், பௌத்த மதமும் களப்பிரர்களின் அரசாங்க மதமாக இருந்தது. களப்பிர புரட்சியாளர்களின் காலத்தில் காஞ்சிபுரமும், காவிரிபும்பட்டினமும் மிக மிக முக்கியமான பௌத்த நகரங்களாக இருந்தன. ஆரிய கலப்பற்ற மிகச் சிறந்த பௌத்த தமிழ் இலக்கியங்கள் களப்பிரர் ஆட்சி காலத்திலேயே எழுதப்பட்டன. சீவகசிந்தாமணி, நரிவிருத்தம், கிளிவிருத்தம், பெருங்கதை போன்ற இலக்கியங்கள் இதற்கு உதாரணம்.

சங்கமித்திரர், புத்ததத்தர், புத்தமித்திரர், போதிதருமர் (சினிமா புகழ்) போன்ற மிகச் சிறந்த பௌத்த மத துறவிகள் களப்பிர அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சங்கமித்திரர் இலங்கையில், பௌத்த தத்துவத்தின் ஒரு பிரிவான மகாயன பௌத்தத்தை பரப்பி புகழ் பெற்றவர். போதிதருமர் தென்கிழக்காசியாவில் பௌத்த தத்துவத்தின் தியான பிரிவான ஜென் தத்துவத்தை பரப்பி புகழ் பெற்றவர். இன்றைய வரலாற்று நூல்கள் சித்தரிப்பது போல் களப்பிரர் ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்திருந்தால் இவர்களால் இத்தகைய சாதனைகளை செய்திருக்கவே முடியாது.

களப்பிரரை பற்றி முதன் முதலில் இந்த உலகிற்கு அறிவித்த வேள்விக்குடி செப்படு கூட கொற்கைகிழான் தற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு உரிமையாக கொடுக்கப்பட்ட வேள்விக்குடி என்னும் ஊரை பிடுங்கிகொண்ட கயவர்களாகவே களப்பிரரை அறிமுகப்படுத்துகின்றது. தன் பிறப்பை பெரிது படுத்தி உடல் உழைப்பு இல்லாமல், பிறரை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைப்பது மட்டும் கயமைத்தனம் கிடையாதோ!

உண்மை வரலாற்றை திரிப்பதும், மறைப்பதும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் எழுதுகோல் தருமம். தாங்கள் எழுத புகும் வரலாற்று நிகழ்வுகளில் ஆரிய வர்ணம் தூக்கலாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது இவர்களின் தலையாய வரலாற்று கடமை. ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான அனைத்தையும் சிறுமைபடுத்துவதும், கேவலப்படுத்துவதும், எதிர்ப்பு குரல் எழுப்புபவர்களை துரோகிகளாக சித்தரிப்பதும் இவர்களுக்கு இப்பிறவின் புண்ணியத்தை தேடித்தரும் செயல்கள். இவர்களுக்கு மத்தியில் பாகுபாடு அற்ற உண்மை வரலாற்றை மீட்டெடுக்கும் நடுநிலையான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் இருப்பது ஒன்றே உண்மை இன்றும் உயிருடன் இருக்கிறது என்பதற்கு அடையாளம்.

கி.பி. 250 முதல் தமிழகத்தை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்த களப்பிரரின் ஆட்சி 325 வருடங்கள் கழித்து கி.பி. 575-ல் முடிவிற்கு வந்தது. தெற்கில் பாண்டியன் கடுங்கோனும், வடக்கில் பல்லவன் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வீழ்ச்சியடைய செய்தார்கள். ஆரிய பார்ப்பனியம் மீண்டும் ஆதிக்க சிம்மாசனம் ஏறியது ‘பழைய குருடிகள் கதவை திறந்தார்கள்’. பிடுங்கபட்ட பிராமண உரிமைகள் மீண்டும் அவர்களின் திறந்திருந்த வாயிக்குள் வந்து விழுந்தன. பிராமணர்களின் சலுகைகள் மீண்டும் அவர்களுக்கு கிடைத்ததும் தமிழகத்தின் இருண்ட காலம் முடிந்தது!

ஆதிக்க வர்கத்திற்கு எதிரான செயல்பாடுகள், எல்லாருக்கும் எல்லாம், தமிழ் இலக்கிய வளர்ச்சி, மத சார்பற்றத் தன்மை இவை போன்ற சிறப்பு அம்சங்கள் கொண்ட களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா அல்லது ஆதிக்க வர்கத்திற்க்கு எதிரான புரட்சி குரலா என்று தீர்மானிப்பது இந்த கட்டுரையை வாசிப்பவரின் கைகளிலேயே இருக்கிறது.








வெள்ளி, 27 ஜூலை, 2012

திருச்சியில் முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன், மகன்கள், மருமகன்கள் கைது: பதட்டம்
Posted by: Vadivel
Rajini, Kamal together on screen a...

SHARE THIS STORY

0

Ads by Google
Looking for a new Mobile? www.Saholic.com/Best-Deals
Check out these Burning Hot Deals. Original Mobiles with 1Yr. Warranty
திருச்சி: தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் விஸ்வநாதன் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியில் வீர முத்தரயைர் பேரவையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து செல்வகுமார் எடமலைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட 5 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
விஸ்வநாதன் கைது செய்யப்பட்டதால் திருச்சியில் பதட்டமாக உள்ளது. இதையடுத்து திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரகளையில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது
கருத்துகள்பதிவு செய்த நேரம்:2012-07-27 10:49:50
திருச்சி, : வீரமுத்தரையர் பேரவை பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முத்தரையர் சங்க தலைவர் விஸ்வநாதன், மகன்கள் மற்றும் மருமகன்கள் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையறிந்த லால்குடி பகுதி வாலிபர்கள் ராஜேஷ் (27), தினேஷ் (27), விஜயகுமார் (29), சந்திரமோகன் (27), பிரவின்ராஜ் (23), சரவணன் (20) ஆகிய 6 பேர் நேற்று மாலையில் வரகனேரியில் உள்ள சங்க தலைவர் விஸ்வநாதன் அலுவலகத்திற்கு காரில் வந்தனர். 
அப்பகுதியில் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காந்திமார்க்கெட் இன்ஸ்பெக்டர் மயில்சாமி 6 பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தார்.
வாலிபர் வீடு சூறையாடி கொலை மிரட்டல்: முத்தரையர் சங்கத்தலைவர் மகன்களுடன் கைது Tiruchirappalli வியாழக்கிழமை, ஜூலை 26, 1:34 PM IST 0கருத்துக்கள்0 இமெயில் பிரதி


திருச்சி, ஜுலை. 26-

திருச்சி வீர முத்தரையர் சங்க நிறுவன தலைவர் செல்வகுமார். திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள பெரிய கொத்தமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், தமிழ்நாடு முத்தரையர் சங்க நிறுவன தலைவர் ஆர்.விசுவநாதன் தரப்புக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 12.3.2012 அன்று செல்வகுமார் மண்ணச்சநல்லூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஆர்.விசுவநாதன் தரப்பினர் செல்வகுமாரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதையும் மீறி செல்வகுமார் கோவிலுக்குள் சென்றார். கடந்த 24.3.2012 அன்று பெரிய கொத்தமங்கலத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டுக்கு ஒரு கும்பல் சென்றது. அங்கு அவரது வீட்டை அடித்து நொறுக்கி பொருட்களையும் சூறையாடியது. அவரது மோட்டார் சைக்கிள், கார் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தியது. இதனை தடுத்த செல்வகுமாரை முத்தரையர் சிலைக்கு இனி மாலை போடக்கூடாது, மீறினால் சுந்தர் நகர் மாணிக்கத்தை கொலை செய்தது போல் உன்னையும் கொலை செய்வோம் என்று அந்த கும்பல் மிரட்டிவிட்டு சென்றது.

செல்வகுமார் தமிழக முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பினார். அதன்பேரில் விசாரணை நடத்துமாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து திருச்சி கண்டோன்மெண்டு போலீஸ் உதவி கமிஷனர் காந்தி, எடமலைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்நாடு முத்தரையர் சங்க நிறுவன தலைவர் ஆர்.விசுவநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தன்ராஜ் ஆகிய 5 பேர் மீதும் செல்வகுமார் வீட்டை சூறையாடுதல் (427), கொலை மிரட்டல் (506) விடுத்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆர்.விசுவநாதன் வீட்டிற்கு போலீஸ் படை சென்றது. அங்கு தூங்கி கொண்டிருந்த ஆர்.விசுவநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். அவரது மருமகன்கள் ரவிசங்கர், தன்ராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முத்தரையர் சங்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். முத்தரையர் சங்க நிறுவன தலைவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முத்தரயைர் மு.சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9 வரை சிறை: திருச்சி கோர்ட்

தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதனுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க திருச்சி ஜே.எம். 2 கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் வீர முத்தரயைர் பேரவையை சேர்ந்தவர் செல்வகுமார். இவரை சிலர் அடித்து, வீட்டை சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக செல்வகுமார் எடமலைப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். 

செல்வகுமாரின் புகாரை ஏற்று தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்‌ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட 5 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி ஜே.எம். 2 கோர்ட்டில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

இதனையடுத்து அவர்கள் ஐந்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது குறித்து விஸ்வநாதன் கூறுகையில், ‌போலீசார் எதற்காக, எந்த வழக்குக்காக கைது செய்தனர் என்ற விபரமே தனக்கு தெரியாது என்று கூறினார். இதனிடையே விஸ்வநாதன் கைதால், திருச்சி புறநகரில் சிறிது பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Caste outfit leader, kin held on vandalism charge

STAFF REPORTER
SHARE · PRINT · T+
Share
1

Tamil Nadu Mutharaiyar Sangam president R. Viswanathan (first from left), being taken by police in Tiruchi on Thursday.— PHOTO: R.M. RAJARATHINAM
The leader of the Tamil Nadu Mutharaiyar Sangam R. Viswanathan, his two sons and two sons-in-law were arrested on Thursday on a complaint by the leader of the Veera Mutharaiyar Peravai, Selvakumar, alleging they had ransacked his residence at Periya Kothamangalam and threatened to eliminate him owing to previous enmity.

They were reportedly taken for questioning early in the day and detained in an Armed Reserve community hall at K.K. Nagar here for a few hours.

The city police deployed a large number of personnel at the spot to prevent their supporters from assembling.

Mr. Viswanathan, his sons, Ramprabu and Balamurugan, and sons-in-law Ravishankar and Dharmaraj, were charged under IPC Sections 147 (unlawful assembly), 148 (rioting with deadly weapons), 307 (attempt to murder), 427 (causing damage to the amount of Rs. 50 or upwards), and 506 (ii) under Tamil Nadu Property (Prevention of Damage and Loss) Act.

They were subsequently brought to the district court under tight security and produced before Judicial Magistrate II Rajendran who remanded them in judicial custody.

In May, a group of Tamil Nadu Mutharaiyar Sangam members were arrested for indulging in vandalism at the Gandhi Market and in Fort Station limits while taking out an unauthorised procession — the outfit was permitted only to garland a statue of Perumpidugu Mutharaiyar in connection with ‘Sandhaya Vizha’.

They were arrested for destroying windowpanes of four buses, attacking passers-by, and attacking a police inspector.

Mr. Viswanathan, who is also an accused in the case, had secured bail.
 ·  ·  · 7 hours ago
TN: Caste outfit leader held for assault
The New Indian Express | 27-Jul 12:36 PM
Tiruchy: The president of Tamil Nadu Mutharaiyar Munnetra Sangam, a caste outfit, was arrested along with his sons and sons-in-law on Thursday for allegedly assaulting a man belonging to a rival outift following a rift. Police said on March 12, the members of the Mutharaiyar Sangam, under the instructions of their president R Viswanathan (65), barged into the house of the founder president of Veera Mutharaiyar, K Selvakumar (40), and ransacked his house. They also assaulted him and threatened him with dire consequences.
It is said that Viswanathans henchmen warned Selvakumar to dissolve the outfit, which was akin to their Sangam. Subsequently, Selvakumar lodged a complaint with E-Pudhur Police and a case was registered. There was a prolonged rivalry between the members of both the outfits and they indulged in frequent clashes. As both outfits belonged to the same community, they were very particular on celebrating their caste festivals.
It is said that Veera Mutharaiyar Sangam members had been gaining popularity by organising a series of celebrations for the Mutharaiyars, which apparently did not go down well the Tamil Nadu Mutharaiyar Munnetra Sangam. Based on the complaint, police arrested Viswanathan, his sons Ramprabhu (32) and Balamurugan (28), his sons-in-law R Ravi Sankar (38) and M Dharmaraj (37), early on Thursday.
Following interrogation, they were produced before the Judicial Magistrate Court II and Judge Rajendran remanded all the five in judicial custody till August 9. They were then lodged in the central prison. A posse of policemen was deputed at the Court and across the city




முத்தரையர்

கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர். "முத்தரையர்" என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு காலம் ஆண்டார்கள்? இப்பொழுதுள்ள முத்தரையர் என்ற பெருங்குடி மக்களுக்கும், அக்கால முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு? முத்தரையர் என்ற சொல் எதைக் குறிக்கிறது? என்றெல்லாம் மிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்த ஆசிரியப் பெருமக்கள் உண்டு. இந்த ஆராய்ச்சியை அண்மையில் நான் மேற்கொள்ள நேர்ந்த போது தமிழக வரலாற்றில் இதுகாறும் தெளிவாராத பல உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு; "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். இவர்கள் வேங்கடத்தை ஆண்ட சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள். கி.பி. 4ஆம் நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து.
முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான் முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர்.
ஏறக்குறைய 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன் என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன். கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன் செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது. முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது (பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்). சமஸ்கிருதப் பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ஸ்ரீமத் கொங்கணி விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன) என்று குறிக்கறான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது "கொங்கணி முத்தரசரு" என்று கூறுகிறான். இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச் சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர் என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன் முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் சிவமாறன் என்ற கங்கமன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன் என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில் முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப் பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள் என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் "நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி" (அகம் 44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத் தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடி சூட்டியுள்ளார்கள்.
கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத் தொடங்கினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும், சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.
அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா) என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்" என்றும், தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம்.