திங்கள், 6 ஜூன், 2011

The cat has come out atlast

எதிர் பார்த்தது போலவே பூனை குட்டி ஒரு வழியாக வெளியே வந்துவிட்டது ,மதவாத சக்திகளின் முகமூடிதான் இந்த மாட்டு எலும்பு மருந்து வியாபாரி பாபா ராம் தேவ் என்பது சமுக ஆர்வலர்களின் அனுமானம் உறுதியாகி விட்டது ,இது போன்ற போலி உண்ணாவிரத போரட்டங்களின் மூலம் இளைஞர்களின் மூளை சலவை செய்து உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர் காய நினைக்கும் காவி முகமூடிகளை மக்கள் உணர்ந்து பாடம் கற்பிக்க வேண்டும் ,இது போன்ற போரட்டங்களின் மூலம் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட இந்துக்கள் ,முஸ்லிம்கள் ,கிருஸ்த்துக்கள், சமுதாய தலைவர்கள் ஒன்றாக இனைய வேண்டும் இல்லாவிடின் ஊழல் வாதிகளாக ,கிரிமினல்களாக ,சித்தரிக்கப்பட்டு ,அவமனபடுத்தப்பட்டு ,முற்றிலுமுமாக அகற்றிவிடுவார்கள் ,என்பதை அனைவரும் உணர்ந்து செயல் படவேண்டிய காலகட்டம் இது .

ஆங்கில மற்றும் ஹிந்தி ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக களமிறங்கி பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட ,ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் வளர்ச்சியை ஒழித்துக்கட்டும் வேலை இதுவே என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெற்றிகரமாக செய்துக்கொண்டிருகின்றன ,என்பதை மனதில் நிறுத்தி மேற்கூர்யா சமுதாய மக்கள் விழிப்புணர்வோடு இருந்து முறியடிக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக