வெள்ளி, 27 ஜூலை, 2012

ரகளையில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது
கருத்துகள்பதிவு செய்த நேரம்:2012-07-27 10:49:50
திருச்சி, : வீரமுத்தரையர் பேரவை பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முத்தரையர் சங்க தலைவர் விஸ்வநாதன், மகன்கள் மற்றும் மருமகன்கள் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையறிந்த லால்குடி பகுதி வாலிபர்கள் ராஜேஷ் (27), தினேஷ் (27), விஜயகுமார் (29), சந்திரமோகன் (27), பிரவின்ராஜ் (23), சரவணன் (20) ஆகிய 6 பேர் நேற்று மாலையில் வரகனேரியில் உள்ள சங்க தலைவர் விஸ்வநாதன் அலுவலகத்திற்கு காரில் வந்தனர். 
அப்பகுதியில் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காந்திமார்க்கெட் இன்ஸ்பெக்டர் மயில்சாமி 6 பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக