திங்கள், 16 ஜனவரி, 2012

vanniyar's dumped our people at near odugathur of vellore outskirts


அன்பார்ந்த சகோதர தோழர்களே !சற்றுமுன் எனக்கு ஒரு தொலை பேசி வந்தது பேசியவர் நமது இனத்தை சார்ந்த இளம் தோழர் இவர் எனக்கு சென்ற வாரம் தான் அறிமுகமானார் ,அதுவும் நமது புதுகோட்டை நண்பர் முத்தரையர் கார்த்திக் ப்ளாக் பார்த்துவிட்டு அவரை தொடர்பு கொண்டுள்ளார் அவர் எனது தொலை பேசி எண் கொடுத்துள்ளார் அதன் மூலம் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார் அவர் இன்று சற்றுமுன்பு தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார் .
அவர் பேசிய பின்பு அவரின் உறவினர் ஒருவர் என்னிடம் பேசினார் அதாவது வேலுரிளிருந்து சுமார் நார்ப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரமுள்ள ஒடுகத்தூர் என்னும் ஊருக்கு அருகில் ஆறு கிலோ மீட்டர் தூரமுள்ள மேட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நமது இனத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் அதே போல் சுற்று புற கிராமத்தில் வன்னியர்கள் வசிக்கிறார்கள் அவர்கள் இன்று நடை பெற்ற மாடு விடும் திருவிழாவில் நமது இன மக்களின் மாடுகள் விடகூடாது என்று அராஜகம் செய்துள்ளனர் எவ்வளவோ பேசியும் கடைசிவரை அனுமதியாதால் வேதனையுடுன் திரும்பியுள்ளார்கள் ,இதைதான் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கேட்பதற்கு யாரும் இல்லை என்றும் வேதனை பட்டுகொண்டார் .இவ்வளவுக்கும் காரணம் முன்னால் எம் எல் ஏவும் தற்போதைய வேலூர் மாநகராட்சியின் துணை மேயரும் ஆன தர்மலிங்கம் அவர்களின் மகன் சேரன் தான் காரணம் என்றும் கூறினார் .
எப்போது பிறக்கும் விடிவு காலம் நமது இனத்திற்கு என்று தெரிய வில்லை ,!பார்ப்போம் .அந்த தர்மலிங்கம் அதிமுக வை சேர்ந்தவர் ஆவார் .
 ·  ·  · 55 minutes ago near Vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக