ஞாயிறு, 16 ஜூன், 2013

களப்பிரர்கள் காலம் என்பது இருண்ட காலம்தானே.....

நான் படித்தக் காலத்திலிருந்தும், எனக்கு முன்னால் படித்தக் காலத்திலிருந்தும் இப்போது பிள்ளைகள் படிக்கிற காலத்திலும் குப்தர்கள் காலம் பொற்காலம் களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்று வரலாற்றுப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இங்கு, ‘யாருக்கு’ என்று ஒரு கேள்வி இருக்கிறது. குப்தர்கள் காலம் பொற்காலம், யாருக்கு? களப்பிரர்கள் காலம் இருண்ட காலம், யாருக்கு? பார்ப்பனர்களுக்கு எந்தக் காலம் எல்லாம் பொற்காலமாக இருந்திருக்கிறதோ அதை நாட்டின் பொற்காலமாக அவர்கள் அறிவித்தார்கள். அவர்களுக்கு எந்தக் காலம் எல்லாம் இருண்ட காலமாக இருந்ததுவோ அதை நாட்டின் இருண்ட காலமாக அறிவித்தார்கள். களப்பிரர்கள் தமிழர்களாக இல்லையா என்பது வேறு.
அதே நேரத்தில் அவர்கள் சமூக நீதிக்கு உட்பட்டுப் பல செயல்களைச் செய்திருக்கிறார்கள் என்று பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பேராசிரியர் முனைவர் ஆ. பத்மாவதி அவர்கள் எழுதி இருக்கின்ற நூல் ஒன்றில் மிக அருமையாகப் பல சான்றுகளைத் தந்து இருக்கிறார்கள். உழைக்காமல் இருக்கிற பார்ப்பனர்களுக்கு நிலத்தை கொடுத்த காலம் பொற்காலம் என்றும் அவர்களிடமிருந்து அதை பறித்து உழைக்கும் மக்களுக்கு பங்கீட்டு கொடுத்த காலம் இருண்ட காலம் என்று சொல்வார்களேயானால் அதை எத்தனை மோசடியான புரட்டான வரலாறு என்பதை உணரவேண்டும்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23802

சங்க காலத்தில் களப்பிரர்கள் ஆட்சியில், அவர்கள் குறுநில மன்னர்களாக இருந்த போது அப்போதைய மொத்த தமிழக நிலபரப்பும் அவர்கள் வசம் இருந்தது. அவர்களின் ஆட்சி காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் நலிந்து போய், முழுக்க முழுக்க சமணர்களின் ஆட்சிதான் நடைபெற்றது. மேலும் அந்த ஆட்சியில் பார்ப்பன‌ர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அதன் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த சோழர்களின் ஆட்சி காலத்தில்தான் பார்ப்பன‌ர்களுக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இருப்பினும் தேவாரம், திருமறைகளை தொகுத்து ஓத, 48 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கோயிலில் தமிழில் பாடல்கள் பாடிட பாட்டாலகன், அமுதன் காணி, வானராசி கூத்தன், சூற்றி எனும் நால்வர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். வடமொழியை விட, தமிழ் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக